Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உங்களுக்கு பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா மாப்பிள்ளை?
Recommended Video
சென்னை: பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் நைசாக நழுவிய நடிகரை பார்த்து மக்கள், உங்களுக்கு பணம் கிடைக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா என்று கேட்டு வருகின்றனர்.
பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் பார்க்க டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. நிகழ்ச்சி துவங்கியபோதே இந்த ஆளு யாரையும் திருமணம் செய்ய மாட்டார் என்று பார்வையாளர்கள் அடித்துக் கூறினர்.
நடிகரும் அனைத்து போட்டியாளர்களுடனும் நெருங்கிப் பழகி கடலை போட்டு லிட்டர் லிட்டராக ஜொள்ளுவிட்டார்.
ஜொள்ளு
போட்டியாளர்களை பார்த்தாலே எப்பொழுது பார்த்தாலும் ஈ என்று பல்லை பல்லை காட்டி ஜொள்ளுவிட்டார் நடிகர். இறுதியில் யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி ஒரு பெண்ணையும் தேர்வு செய்யவில்லை.
வாழ்க்கை
உங்களுக்கு படம் ஓடாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டால் நீங்கள் பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா என்று நிகழ்ச்சியை பார்த்தவர்கள் நடிகரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்
மூன்றில் ஒரு பெண்ணை மனைவியாக தேர்வு செய்தால் மற்ற இரண்டு பெண்களின் திருமணம் நின்றதுபோது ஆகிவிடும் என்று கூறி எஸ்கேப் ஆனார் நடிகர். தற்போது மூன்று பெண்களின் திருமணமும் நின்றது பரவாயில்லையா அவருக்கு?
லட்டு
திரையுலகில் லட்டு லட்டா பார்த்த அவர் இந்த பெண்களில் யாரையும் தேர்வு செய்ய மாட்டார் என்று பலர் தொடர்ந்து கூறி வந்தது போன்றே நடந்துவிட்டது. நடிகர் பணத்தை வாங்கிக் கொண்டு நடையை கட்டிவிட்டார்.
அடேங்கப்பா
இறுதி நாள் நிகழ்ச்சியில் நடிகர் ரொம்ப பாவம் போன்று முகத்தை வைத்துக் கொண்டு வாங்கிய காசுக்கு மேல் சூப்பராக நடித்துவிட்டு சென்றுள்ளார். இது உலகமகா நடிப்புடா சாமி என்று தான் சொல்லத் தோன்றியது.