Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பேருதான் பெத்த பேரு.. தண்ணி வரி கூட கட்ட கசக்குதாம் தியா மிர்சாவுக்கு!
பாலிவுட்டில் டாப் நடிகையாக இருந்தாலம், தியா மிர்சா பிறந்தது ஆந்திராவில். மாடல் அழகி, மிஸ் ஏசியா பசிபிக் பட்டம் வென்றவர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகி என பல துறைகளில் கால்பதித்திருப்பவர் தியா மிர்சா.
முன்னாபாய் எம்பிபிஎஸ், ஓம் சாந்தி ஓம் உள்பட பல படங்களில் நடித்துள்ள தியா மிர்சா, முதலில் அறிமுகமானது என் சுவாசக் காற்றே என்ற தமிழ்ப் படத்தில்தான்.
இவருக்கு ஹைதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பெரிய வீடு உள்ளது. இந்த வீட்டுற்கு கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து தண்ணீர் வரி செலுத்தவில்லை. 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது கணக்கில் ரூ. 33 ஆயிரத்து 480 வரி பாக்கி இருந்தது. தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் கட்டவேண்டும் என்று ஐதராபாத் மெட்ரோபாலிடன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ரெட் நோட்டீஸ் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடிநீர் வாரியம் இந்தத் தொகையை செலுத்த சொல்லி பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆயினும் பணம் செலுத்தப்படாததால் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாதபோது இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டு செல்ல வேண்டும். தியாவின் சார்பில் அதுவும் செய்யப்படவில்லை என்று ஜுபிலி ஹில்ஸின் குடிநீர் வடிகால் வாரிய பொறுப்பாளரான பி. ஜே. ஸ்ரீநாராயணா தெரிவித்தார்.
ரெட் நோட்டீஸ் தகவல் கிடைத்த 15 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படுதல்வேண்டும். இல்லையெனில், குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதுடன், வருவாய் வசூல் சட்டத்தின் கீழ், குடிநீர் வாரியத்தின் தகவல் பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ள அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் மூலம் வசூலிக்கப்படும் என்று குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.