Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தீபா ஷாவிடம் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை: ஓவியா காட்டம்
சில்லுன்னு ஒரு சந்திப்பு ஷூட்டிங் மாதவரத்தில் நடந்தபோது கேரவனுக்குள் படத்தின் நடிகைகளில் ஒருவரான ஓவியா செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கையில் இன்னொரு நடிகையான தீபா ஷா தனது செல்போனில் சத்தமாகப் பேசியுள்ளார். இதையடுத்து ஓவியா கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று கூற தீபா ஷா டென்ஷனாகி வெளிநடப்பு செய்துவிட்டார். பின்னர் சமாதானம் செய்து அழைத்து வந்தார்களாம்.
இந்நிலையில் தீபா ஷாவிடம் ஓவியா மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானது. இது ஓவியாவின் காதுகளுக்கு எட்டவே உடனே அவர் பிரபல பத்திரிக்கை ஒன்றை தொடர்பு கொண்டு கூறுகையில்,
கேரவனுக்குள் நான் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கையில் தீபா செல்போனில் சத்தம் போட்டு பேசியதால் பேட்டிக்கு இடையூறாக இருந்தது. அதனால் தான் மெதுவாக பேசச் சொன்னோம். அவர் என்னவென்றால் பெரிய பிரச்சனையை கிளப்பிவிட்டு என் மேனேஜர் அவரை தாக்க முயன்றதாகக் கூறி ஷூட்டிங்கை விட்டே வெளியேறினார்.
அதன் பிறகு தயாரிப்பாளர் அவரை மீண்டும் ஷூட்டிங்கிற்கு வருமாறு அழைத்த பிறகே திரும்பி வந்தார். ஆனால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டதாக அவர் கூறுவதில் உண்மையில்லை. அவர் ஒரு விளம்பரப் பிரியை என்று எனக்கு தெரியாது என்றார்.
அடடா ஓவியாவை இப்படி டென்ஷனாக விட்டுவிட்டார்களே...