காலா இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படம் கபாலியை தொடர்ந்து ரஜினி மற்றும் ரஞ்சித்தின் இரண்டாவது கூட்டணி படமாகும். இப்படத்தினை தனுஷின் ஒளண்டார் பிலிம்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதை:
மும்பையின் மையப்பகுதியான தாராவியில் வாழும் தமிழர்களை காக்கும் காவல் வீரன் காலா (ரஜினி). மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்), நான்கு மகன்கள், பேரக்குழந்தைகள் என கூட்டுக் குடும்பமாக தாராவியில் வாழ்ந்து வருகிறார். மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியின் தலைவரான ஹரிதேவ் (நானா...
Read: Complete காலா கதை
-
நான் வேண்டும் என்று அந்த இயக்குநர் அடம் பிடித்தார்.. மேடையில் ஓபனாக பேசிய ஆண்ட்ரியா
-
காடுவெட்டி, அமிகோ காராஜ் வசூல் என்னாச்சு தெரியுமா? ஒரே மீம் போட்டு சோலியை முடித்த ப்ளூ சட்டை மாறன்!
-
மஞ்சுமெல் பாய்ஸ் தான் இங்கே.. கேரளாவில் விஜய் படங்கள் பண்ண ரெக்கார்டு எல்லாம்.. பிருத்விராஜ் பளிச்!
-
ஜேசன் சஞ்சய் சொன்ன கதை.. நிராகரித்த சிவகார்த்திகேயன்?.. காரணம் விஜய்யின் குடும்ப பஞ்சாயத்தா?
-
ராஜமெளலி படத்துல மகேஷ் பாபு இந்த கெட்டப்புல நடிக்கிறாரா?.. வெளியான வெறித்தனமான ஸ்டில்!
-
ஒரே காரில் கமலும் சிம்ரனும்?.. அப்புறம்தான் கௌதமி?.. கண்டபடியெல்லாம் சொன்ன பிரபலம்
-
tamil.flimibeat.comரஜினி - காலாவில் ரஜினியின் நடிப்பு வேற லெவல். பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவது, மனைவியிடம் பம்மி விழிப்பது, சரினாவை பார்த்ததும் காதலில் மூழ்குவது, எதிரிகளை கண்களாலேயே அடக்குவது என கிளாசாக மிரட்டி இருக்கிறார். கபாலியை போல், ரஜினிக்குள் இருக்குள் ஒரு நல்ல நடிகனை அழகாக வெளிகாட்டி இருக்கிறார். குறிப்பாக எந்த ஈகோவும் பார்க்காமல், இயக்குனரின் நடிகராக நடித்துக் கொடுத்திருக்கிறார்.
நானா படகேர் - ஒரு அரசியல் கட்சி தலைவராகவே திரையில் அப்படியே அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார். தன்னை விட ஒரு பவர் புல்லான வில்லன் காலாவுக்கு இருக்க முடியாது என நிரூபித்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்.
ஈஸ்வரி ராவ் - இவர் தான் காலா படமே என சொல்லும் அளவுக்கு, காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்கிறார். கணவனின் முன்னாள் காதலியை பார்த்து பொறாமைபடுவது, கணவனிடம் சண்டைபோடுவது போல், அவர் இசைவுக்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்வது என செல்விக்கு உயிர்கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல ரீ-என்ட்ரி ஈஸ்வரி ராவுக்கு. அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
காலா சொல்ல வரும் செய்தி இந்த உலகுக்கு உரக்க சொல்லப்பட வேண்டும். அந்த வகையில் காலா, ரஜினி பாதி, ரஞ்சித் பாதி கலந்து செய்த கலவை...
விமர்சனங்களை தெரிவியுங்கள்