Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பைனான்சியர் கடனை அடைக்க முதன்முதலா வாங்கிய பங்களாவை கூட வித்திருக்கேன்.. மனம் திறக்கும் பார்த்திபன்!
சினிமா பைனான்சியர்களிடம் வாங்கிய கடனுக்காக தான் முதல் முறையாக வாங்கிய பங்களாவைக் கூட விற்றுவிட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சினிமா பைனான்சியர்களிடம் வாங்கிய கடனுக்காக தான் முதல் முறையாக வாங்கிய பங்களாவைக் கூட விற்றுவிட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன்சுமை, கந்து வட்டி கொடுமையால் அசோக்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கந்துவட்டி கொடுமையால் பறிபோகும் கடைசி உயிர் இதுவாக இருக்க வேண்டும் என்றும் கந்துவட்டியை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அசோக்குமாரின் மரணத்துக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
|
பார்த்திபனின் அனுபவம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அஜித், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோரும் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் கந்துவட்டி கொடுமையால் தனக்கு நேர்ந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அன்புச்செழியனும் ஒருவர்..
அதாவது நான் சினிமா பைனான்சியர் பல பேர்கிட்ட வட்டிக்கு பணம் வங்கியிருக்கேன் என அவர் தெரிவித்துள்ளார். அதில் அன்புச்செழியனும் ஒருவர் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பங்களாவைக்கூட வித்திருக்கேன்
வாங்குன பணத்தை ஒத்துக்கிட்ட வட்டியோட சொன்ன தேதியில் கொடுக்க, தான் முதன்முதலா வாங்குன பங்களாவைக்கூட வித்திருக்கேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் யார்கிட்டேயும் தலைகுனிந்து நின்றதில்லை என்றும் பார்த்திபன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தனக்கும் அந்த திமிர் பிடித்திருக்கு
அந்த திமிர் என்னை பிடித்திருக்கு என்றும் தனக்கும் அந்த திமிர் பிடித்திருக்கு என்றும் அவர் கூறினார். நான்கு படங்களில் நடித்து கடனை அடைத்துவிட்டு மறுபடியும் படமெடுப்பேன் அதுதான் தனக்கு ஏற்படும் இடைவெளி என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.
சவாலாகதான் எதிர்கொள்கிறேன்..
தான் ஆதங்கப்பட்ட குரல் கொடுப்பது சக நண்பர்களின் பிரச்சனைகளுக்கு தான் என்றும் மற்றபடி தான் சந்திக்கும் பிரச்சனைகளை சவாலாகதான் எதிர்கொள்கிறேன் என்றும் பார்த்திபன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.