Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தயாரிப்பாளர்களுக்கு ஐடியா கொடுத்த அரவிந்த்சாமி.. ஸ்ட்ரைக் பற்றி கருத்து!
Recommended Video
சென்னை : தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் குறித்து நடிகர் அரவிந்த்சாமி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
மேலும், கடந்த 16-ம் தேதி முதல் படப்பிடிப்புகளும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, நேற்று முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில படங்கள் மட்டுமே அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த வேலை நிறுத்தம் குறித்து நடிகர் அரவிந்த் சாமி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். "என்னைப் பொறுத்தவரை மாஸ்டரிங் அல்லது விபிஎப் செய்வதற்கான கட்டணத்தை தயாரிப்பாளரே ஏற்றுக் கொண்டால் தான் கன்டென்ட் சிதையாமல் இருக்கும்.
It is my opinion that if a producer pays a company for mastering or VPF, the content cannot be tampered with. People come to watch the content and therefore all ad revenues on content should be with the producer. It may be fair to share it with the Exhibitor.
— arvind swami (@thearvindswami) March 23, 2018
அதேபோல அந்த கன்டென்டால் வரும் விளம்பரத்திற்கான லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும். எந்த விளம்பரம் எவ்வளவு கட்டணம் என்பதையெல்லாம் முடிவு செய்யலாம். வேண்டுமானால் லாபத்தில் விநியோகஸ்தர்களுக்கு பங்கு தரலாம்.
இப்படிச் செய்தால் முதலீடு செய்பவருக்கு லாபம் சரியாகப் போய்ச் சேரும். தொழில்நுட்பத்தை செயல்படுத்துபவருக்கு அல்ல." என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி. இது தொடர்பாக சிலர் அவருடன் ட்விட்டரில் விவாத்து வருகிறார்கள்.