Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அசோக் செல்வனை காதலிக்கிறேனா?: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்
Recommended Video
சென்னை: அசோக் செல்வனுடன் காதல், திருமணம் என்று வெளியான செய்திகளை பார்த்துவிட்டு பிரகதி விளக்கம் அளித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும், நடிகர் அசோக் செல்வனும் காதலிப்பதாக முதலில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அதிக அளவில் வலம் வந்தன.
இந்நிலையில் இது குறித்து பிரகதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த போஸ்டில் அவர் கூறியிருப்பதாவது,
திருமணம்
நான் யாரையும் காதலிக்கவில்லை, திருமணம் செய்யப் போவதும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு 21 வயது தான் ஆகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டே பாடும் நான் திருமணம் செய்யும் இடத்தில் இல்லை.
பெருமை
என் ரசிகர்களுடான உறவை நினைத்து பெருமையாக உள்ளது. நான் காதலித்தால் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். என் நெருக்கமான நட்பை பற்றி ஒரு செய்தி வெளியானதால் இந்த கதை ஆரம்பித்தது.
மீடியா
காதல் செய்தியை பார்த்து முதலில் காமெடியாக இருந்தது. ஆனால் அனைத்து ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிடவே நான் அதிருப்தி அடைந்தேன். என்னை பற்றி மீடியா தவறான தகவலை பரப்புவதால் அதிருப்தி அடைந்துள்ளேன்.
அசோக்
அசோக் மற்றும் என்னுடைய வெற்றிகளை பற்றி செய்தி வெளியிடாமல் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான செய்தி வெளியானதில் அதிருப்தி அடைந்துள்ளேன். மீடியாக்களுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. பேட்டிகள் அளிப்பது, பத்திரிகையாளர்களுடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் இன்று அவர்களே ஆதாரமில்லாத செய்தியை வெளியிட்டது அதிருப்தி அளிக்கிறது.
நன்றி
இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பையும், ஆதரவையும் பெற நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை என பிரகதி தெரிவித்துள்ளர்.