Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
‘ஒறுத்தல்’... ஜெய்ஆகாஷ் இனி விநியோகஸ்தரும் கூட!
நடிகர் ஜெய் ஆகாஷ் வினியோகஸ்தராக அவதாரம் எடுக்கும் புதிய படம் 'ஒறுத்தல்'.
செந்தில் ஜெகதீசன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்திரி நடித்திருக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஜித்தேந்தர் போலீஸ் அதிகாரியாகவும், வில்லனாக பிர்லா போஸ் இவர்களோடு சுவாதி, மகேஷ், இமாசலம் ராஜீ, ஐஓபி ராமச்சந்திரன் என பலரும் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருப்பது கிருஷ்ணதாசன் ஜெகதீசன்.
படத்தின் ஷூட்டிங் ஊட்டி, மூணாறு, திருச்சி, சென்னை உட்பட பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வருவதற்கு தயாராகியுள்ளது ஒறுத்தல்.
படத்தை நடிகர் ஜெய் ஆகாஷ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேஷம் கட்டிய ஜெய் ஆகாஷ், இதில் விநியோகஸ்தராக கால் பதிக்கிறார்.
இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறுகையில், "ராமகிருஷ்ணாதான் நான் முதன் முதலில் ரிலீஸ் செய்த படம். இந்த 'ஒறுத்தல்' படக்குழு என்னைச் சந்தித்து ரிலீஸ் செய்ய உதவி கேட்டார்கள். பொதுவாகவே என்னைத் தேடி வந்து உதவி கேட்டால் என்னால் முடிந்தவரை உதவும் பழக்கம் உள்ளவன். அதன் அடிப்படையில் படத்தை பார்த்தபோது மிகவும் விறுவிறுப்பாக படம் இருந்தது. ஒரு ஆங்கில கிரைம் த்ரில்லர் படத்தை தமிழில் பார்ப்பதுபோன்ற வேகத்தோடு படம் இருந்தது. இடைவெளியே இல்லாமல் படத்தை பார்த்தேன்.
பொதுவாகவே இதுபோன்ற த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் ஸ்பீடு பிரேக் என்பார்கள். அதனால் படத்தில் பாடல்கள் இல்லை. தமிழில் ஆங்கில ப்படம் பார்க்கும் அனுபவத்தை இந்த படத்தின் மூலம் பெற்றேன். அதன் அடிப்படையில் படத்தை ரிலீஸ் செய்கிறேன்," என்றார்.
கிருஷ்ணதாசன் ஜெகதீசன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, ஞானஜோதி கோவிந்தராஜ் தயாரித்துள்ளார்.