twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனோ மகனை நடுக்கடலில் பயமுறுத்திய எம்எஸ் பாஸ்கர்!

    By Shankar
    |

    MS Bhaskar's fun at mid sea
    நீண்ட இடைவெளிக்கு பிறகு பழ. கருப்பையா ஒரு படம் தயாரிக்கிறார். படத்துக்குப் பெயர் 'நாடி துடிக்குதடி'. இந்த படத்தை செல்வா இயக்கியுள்ளார். இந்த படத்தின் படபிப்டிப்பு பிஜி தீவுக்களில் நடைபெற்றது.

    இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், "பிஜி தீவிலிருந்து வனலேவு தீவுக்கு எட்டு மணி நேரம் போட்ல போகணும். அப்படி போய்விட்டு திரும்பும் போது நாங்க சென்ற போட்டு பயங்கரமா ஆடியது.

    நான் வெளியே வந்து பார்த்தேன். அலைகள் பயங்கரமா வந்து போட்டுல மோதியது. போட்டு கவுந்திடுரா மாதிரி ஆடுது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாடகர் மனோவின் மகன் ஜாகீர், 'என்ன மாமா கடல் இப்படி கொடூரமா கொந்தளிக்குது. இப்போ என்ன பண்றது' என்று என்னிடம் கேட்டார்.

    'இறை நம்பிக்கை இருந்தால் பிரே பண்ணு. மேக்சிமம் இப்படியே போச்சுன்னா ஆளுக்கு ஒரு லைப் ஜாக்கெட் தருவாங்க. அதை வாங்கிட்டு இந்த பசிபிக் கடலில் குதிக்க வேண்டியதுதான். என்ன எந்த பக்கம் கரை இருக்குன்னே தெரியாது. மெதந்துகிட்டே போக வேண்டியதுதான். அப்படியே மெதக்காலமுன்னாலும், கடல் கொந்தளிப்பு ஒரு புறம், குளிர் இன்னொரு புறம் கடுமையா இருக்கு''. என்று நான் சொல்லி முடிப்பதற்குள், சரசரன்னு ஒரு பெரிய மீன் அருகே வந்து வாலாட்டிச் சென்றது.

    இதை பார்த்ததும் ஜாகீர் இன்னும் மிரண்டு போனார். அவரை பார்த்து, "என்ன இவுங்க மாதிரி ஆளுங்கல்லாம் வருவாங்க. அதையெல்லாம் ஏதிர்த்து நாம போகணும்,'' என்றேன்.

    அவர் அவ்வளவுதான். அரண்டு ஆடி போய்விட்டார். பிறகு போட் ஒட்டியவரிடம் கடல் கொந்தளிப்பை பற்றி கேட்டோம். "உங்களுக்கு இது புதுசு. எங்களுக்கு இது பழகிவிட்டது என்றார். அப்பப்போ இந்த மாதிரி சீற்றம் இருக்கும். அதை பற்றி காவலை படமுடியுமா. சில சமயம் படகு கவிழ்ந்து பயணிகள் இறந்த அனுபவமும் உண்டு,'' என்று கூலாக சொன்னார்.

    அப்போது ஒரு பெரிய ராட்சச அலை வந்து மடார் என்று போட்டை தாக்க, அது அப்படியும் இப்படியும் தள்ளாடியாது. நாங்கள் கரைசேரும் வரையில் உயிரை பிடித்துக்கொண்டுதான் வந்து சேர்ந்தோம்," என்றார்.

    நாடி துடிக்குதடி படத்தின் கதை பிஜி தீவில் நடப்பதுபோல படமாக்கி வருகிறார் இயக்குனர் செல்வா. விடுமுறைக்காக பிஜி தீவு செல்லும் இளைஞன் அங்கு வசிக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தின் கதை.

    நாடி துடிக்குதடி, ரணம், சரவண பொய்கை, சொல்லித்தர நானிருக்கேன், சுட்டகதை, ரகளபுரம், சந்தாமாமா, இருவர் உள்ளம், காதல் பிரதேசம், நகராஜசோழன், தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் ஒரு படம், தமிழ், மலையாளம் இரு மொழிகளில் உருவாகும் ஒரு படம் என கைவசம் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

    English summary
    Actor MS Bhaskar made fun with Mano's sone new comer Zakir at the mid sea during the shooting of Naadi Thudikkuthadi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X