Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி
Recommended Video
சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாராம்.
பிரபலமான டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் டிடி எனப்படும் திவ்யதர்ஷினியும் ஒருவர். தனது பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.
நண்பர்
டிடிக்கும் அவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
பிரச்சனை
திருமணத்திற்கு பிறகு டிடி படங்களில் நடிப்பது அவரின் கணவர் வீட்டாருக்கு பிடிக்கவில்லை. இதனால் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
பிரிவு
கணவர் வீட்டார் எதிர்த்தாலும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, படங்களில் நடிப்பதை டிடி நிறுத்தவில்லை. இதனால் பிரச்சனை பெரிதாகி டிடியும், அவரது கணவரும் பிரிந்து வாழத் துவங்கினர். பவர் பாண்டி படத்தின் டைட்டிலில் செல்வி டிடி என்று குறிப்பிடப்பட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நீதிமன்றம்
பிரிந்து வாழும் டிடியும், ஸ்ரீகாந்தும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்புவதாகக் கூறி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.