Don't Miss!
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கணவர் அட்லியுடன் கட்டிலிலில்.. போட்டோ போட்டு விட்டு.. கமெண்ட்டை தூக்கிய பிரியா!
சென்னை : கோலிவுட்டில் க்யூட் கப்பிலாக வலம் வந்து கொண்டு இருக்கும் இளம் தம்பதி அட்லி, பிரியா ஜோடி.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியை பார்ப்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும், அட்லி எந்த வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு போனாலும் மனைவி பிரியாவை எப்போதும் அழைத்து சென்றுவிடுவார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் அட்லியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
என்ன சொல்றீங்க...பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீசா?... தயாரிப்பாளர்கள் சொல்வதென்ன?
ராஜா ராணி
ராஜா ராணி என்ற தரமான காதல் கதையை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டார் அட்லி. காதல் வயப்படுபவர்கள் யாரும் காதலித்தவர்களை மணப்பதில்லை. ஆனால், அந்த முதல் காதல் மனதின் ஆழத்தில் என்றும் இருக்கும் என்ற எதார்த்த காதலை ராஜா ராணி படத்தில் லாவகமாக சொல்லி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
வெற்றித்திரைப்படம்
முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்ற அட்லீ, தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து பெயர் எடுத்துள்ளார். அட்லீ, தற்போது ஷாருக்கான் நடித்து வரும் கிங் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொறமையா இருக்கும்
கதை டிஸ்கசன், படப்பிடிப்பு என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அட்லீ எப்போதும் தனது மனைவி பிரியாவுடனே காணப்படுகிறார். இந்த லவ்வபில் ஜோடியை பார்க்கும் போது நமக்கே சற்று பொறாமை எட்டிப்பார்க்கும். ஜாலியா ஊர் சுற்றுவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லீயுடன் ஆட்டம் போட்டு ரீல் போடுவது என பிரியா எப்போது இணையத்தில் ஆக்டிவாகவே இருக்கிறார்.
கணவருடன் நெருக்கமாக
தற்போது கூட பிரியா தனது கணவர் அட்லீயுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தால் நெட்டிசன்ஸ்கள் நிச்சயம் தாறுமாறான கமெண்டை பதிவிடுவார்கள் என்பதால், கமெண்டை ஆஃப் செய்துவைத்துள்ளார். எதுக்கு இப்படி ஒரு போட்டோவை போட வேண்டும் கமெண்டை ஆஃப் செய்து வைக்க வேண்டும் என்றும் இணையத்தில் அந்த போட்டோவை பார்த்து பேசி வருகின்றனர்.