தேக்கடியில் ரஜினி, ஷங்கர் இன்று டிஸ்கஷன்! சிவாஜி பட திரைக் கதை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இன்று தேக்கடி சென்று அங்கு ஏற்கனவே முகாமிட்டு கதையை செதுக்கிவரும் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சுஜாதா ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.ஏவி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகப் போகும் படம் சிவாஜி. இப்படத்திற்கான கதையை செதுக்குவதில்இயக்குநர் ஷங்கர் படு மும்முராக உள்ளார். இதற்காக ஹோகனேக்கல் சென்று முதலில் கதையை வடிவமைத்து வந்த அவர்தற்போது தனது உதவியாளர்களுடன் தேக்கடியில் முகாமிட்டுள்ளார்.கடந்த சில நாட்களாகவே தேக்கடியில் தனது 20 உதவியாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு திரைக் கதையை தயார்செய்து வருகிறார் ஷங்கர். இப்படத்திற்கு வசனம் எழுதும் எழுத்தாளர் சுஜாதாவும் 2 முறை தேக்கடி சென்று ஆலோசனையில்ஈடுபட்டுள்ளார்.ரஜினியும் இதுவரை 2 முறை தேக்கடிக்குச் சென்று ஷங்கர் குழுவினருடன் பேசியுள்ளார். தற்போது கதை விவாதம் கிட்டத்தட்டமுடியும் நிலைக்கு வந்துள்ளதாம். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை இன்று தேக்கடி செல்கிறார் ரஜினிஅங்கு ஷங்கர், சுஜாதா ஆகியோருடன் ரஜினி இறுதி கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். திருப்திகரமான முறையில் திரைக்கதைஉருவாகியிருந்தால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்க ரஜினி பச்சைக் கொடி காட்டுவார் என கூறப்படுகிறது.அனேகமாக இன்னும் சில நாட்களில் சிவாஜி படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

By Staff

சிவாஜி பட திரைக் கதை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இன்று தேக்கடி சென்று அங்கு ஏற்கனவே முகாமிட்டு கதையை செதுக்கிவரும் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சுஜாதா ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

ஏவி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகப் போகும் படம் சிவாஜி. இப்படத்திற்கான கதையை செதுக்குவதில்இயக்குநர் ஷங்கர் படு மும்முராக உள்ளார். இதற்காக ஹோகனேக்கல் சென்று முதலில் கதையை வடிவமைத்து வந்த அவர்தற்போது தனது உதவியாளர்களுடன் தேக்கடியில் முகாமிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தேக்கடியில் தனது 20 உதவியாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு திரைக் கதையை தயார்செய்து வருகிறார் ஷங்கர். இப்படத்திற்கு வசனம் எழுதும் எழுத்தாளர் சுஜாதாவும் 2 முறை தேக்கடி சென்று ஆலோசனையில்ஈடுபட்டுள்ளார்.

ரஜினியும் இதுவரை 2 முறை தேக்கடிக்குச் சென்று ஷங்கர் குழுவினருடன் பேசியுள்ளார். தற்போது கதை விவாதம் கிட்டத்தட்டமுடியும் நிலைக்கு வந்துள்ளதாம். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை இன்று தேக்கடி செல்கிறார் ரஜினி

அங்கு ஷங்கர், சுஜாதா ஆகியோருடன் ரஜினி இறுதி கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். திருப்திகரமான முறையில் திரைக்கதைஉருவாகியிருந்தால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்க ரஜினி பச்சைக் கொடி காட்டுவார் என கூறப்படுகிறது.

அனேகமாக இன்னும் சில நாட்களில் சிவாஜி படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X