Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தேக்கடியில் ரஜினி, ஷங்கர் இன்று டிஸ்கஷன்! சிவாஜி பட திரைக் கதை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இன்று தேக்கடி சென்று அங்கு ஏற்கனவே முகாமிட்டு கதையை செதுக்கிவரும் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சுஜாதா ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.ஏவி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகப் போகும் படம் சிவாஜி. இப்படத்திற்கான கதையை செதுக்குவதில்இயக்குநர் ஷங்கர் படு மும்முராக உள்ளார். இதற்காக ஹோகனேக்கல் சென்று முதலில் கதையை வடிவமைத்து வந்த அவர்தற்போது தனது உதவியாளர்களுடன் தேக்கடியில் முகாமிட்டுள்ளார்.கடந்த சில நாட்களாகவே தேக்கடியில் தனது 20 உதவியாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு திரைக் கதையை தயார்செய்து வருகிறார் ஷங்கர். இப்படத்திற்கு வசனம் எழுதும் எழுத்தாளர் சுஜாதாவும் 2 முறை தேக்கடி சென்று ஆலோசனையில்ஈடுபட்டுள்ளார்.ரஜினியும் இதுவரை 2 முறை தேக்கடிக்குச் சென்று ஷங்கர் குழுவினருடன் பேசியுள்ளார். தற்போது கதை விவாதம் கிட்டத்தட்டமுடியும் நிலைக்கு வந்துள்ளதாம். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை இன்று தேக்கடி செல்கிறார் ரஜினிஅங்கு ஷங்கர், சுஜாதா ஆகியோருடன் ரஜினி இறுதி கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். திருப்திகரமான முறையில் திரைக்கதைஉருவாகியிருந்தால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்க ரஜினி பச்சைக் கொடி காட்டுவார் என கூறப்படுகிறது.அனேகமாக இன்னும் சில நாட்களில் சிவாஜி படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
சிவாஜி பட திரைக் கதை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இன்று தேக்கடி சென்று அங்கு ஏற்கனவே முகாமிட்டு கதையை செதுக்கிவரும் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சுஜாதா ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
ஏவி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகப் போகும் படம் சிவாஜி. இப்படத்திற்கான கதையை செதுக்குவதில்இயக்குநர் ஷங்கர் படு மும்முராக உள்ளார். இதற்காக ஹோகனேக்கல் சென்று முதலில் கதையை வடிவமைத்து வந்த அவர்தற்போது தனது உதவியாளர்களுடன் தேக்கடியில் முகாமிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தேக்கடியில் தனது 20 உதவியாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு திரைக் கதையை தயார்செய்து வருகிறார் ஷங்கர். இப்படத்திற்கு வசனம் எழுதும் எழுத்தாளர் சுஜாதாவும் 2 முறை தேக்கடி சென்று ஆலோசனையில்ஈடுபட்டுள்ளார்.
ரஜினியும் இதுவரை 2 முறை தேக்கடிக்குச் சென்று ஷங்கர் குழுவினருடன் பேசியுள்ளார். தற்போது கதை விவாதம் கிட்டத்தட்டமுடியும் நிலைக்கு வந்துள்ளதாம். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை இன்று தேக்கடி செல்கிறார் ரஜினி
அங்கு ஷங்கர், சுஜாதா ஆகியோருடன் ரஜினி இறுதி கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். திருப்திகரமான முறையில் திரைக்கதைஉருவாகியிருந்தால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்க ரஜினி பச்சைக் கொடி காட்டுவார் என கூறப்படுகிறது.
அனேகமாக இன்னும் சில நாட்களில் சிவாஜி படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.