Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை: விஜய் பட நடிகர் மீது பெண் டான்ஸர் புகார்
மும்பை: நடிகர் சல்மான் யூசுப் கான் மீது பெண் டான்ஸர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
ஏபிசிடி படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் சல்மான் யூசுப் கான். ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த லக்ஷ்மி படத்திலும் நடித்திருந்தார்.
அவர் மீது பெண் டான்ஸர் ஒருவர் மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த பெண் தனது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,
சல்மான்
நான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலை விஷயமாக லண்டனில் இருந்தேன். அப்பொழுது சல்மானின் மேனேஜர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். நாடு திரும்பிய பிறகு ஓஷிவாராவில் உள்ள ஒரு காபி கடையில் வைத்து சல்மானை சந்தித்தேன். துபாயில் பாலிவுட் பார்க்கில் டான்ஸ் ஆடும் வாய்ப்பை அளித்தார் அவர்.
பாலிவுட்
வாய்ப்பு அளித்த பிறகு என்னை தன் காரில் வீட்டில் இறக்கிவிட்டார். அப்போது சல்மான் என்னை கண்ட இடத்தில் தொட்டார். இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று நான் சல்மானிடம் கூறினேன். அதற்கு அவரோ இது எல்லாம் பாலிவுட்டில் ரொம்ப சகஜம் என்றார்.
டான்ஸ் நிகழ்ச்சி
பின்னர் சல்மானின் மேனேஜர் போன் செய்து துபாய் நிகழ்ச்சிக்கு வரச் சொன்னார். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நானும், என் நடனக் குழுவும் துபாய் சென்றோம். ஆகஸ்ட் 30ம் தேதி பஹ்ரைனில் உள்ள பாலிவுட் பார்க் ரிசார்ட்டில் நடக்கும் மற்றொரு நடன நிகழ்ச்சிக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார் சல்மான்.
பாலியல் தொல்லை
துபாய் விமான நிலையத்தில் வைத்து சல்மான் தனது சகோதரரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நடன நிகழ்ச்சி முடிந்து துபாய்க்கு காரில் திரும்பி வந்தபோது சல்மானும், அவரின் சகோதரரும் என்னை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சல்மான் என்னையும், என் நடனக் குழுவையும் கொடுமைப்படுத்தினார், மிரட்டினார். பின்னர் எங்கள் ஒப்பந்தத்தை அவராக ரத்து செய்துவிட்டு எங்களை மும்பைக்கு அனுப்பி வைத்துவிட்டார் என்று அந்த பெண் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.