Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சின்னத்திரையில் 'புலி'..வெள்ளித்திரையில் 'தெறி'..தளபதி ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்
சென்னை: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் விஜய்யின் 'தெறி' திரைப்படம் வெளியாகிறது.
அதே நேரம் சன் டிவியில் கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான 'புலி' திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது டபுள் சந்தோஷத்தில் திளைத்து வருகின்றனர்.
விஜய், சமந்தா நடிப்பில் நாளை வெளியாகும் 'தெறி'யை தெறிக்க விட வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு கட்-அவுட்டுகள், தோரணங்கள் போன்றவற்றை வைத்து தங்கள் உற்சாகத்தை கட்டி வருகின்றனர்.
டிக்கெட் விலை பிரச்சினையும் தற்போது தீர்க்கப்பட்டு விட்டதால், மேலும் பல திரையரங்குகளில் இப்படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
இந்த சந்தோஷமும் இணைந்து கொள்ள சமூக வலைதளங்களில் #theri, #theri fdfs போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டடிக்கச் செய்துள்ளனர்.
மேலும் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தளபதியின் படம் என்பதால், ஒரே நாளில் 2 லட்டுகளை சுவைக்க விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
தற்போதைக்கு தளபதி ரசிகர்களின் மனநிலை இதுதான் 'ஐ ஆம் வெய்ட்டிங்'..