Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோவை பார்த்து பயந்த மணிரத்னம் நாயகி
Recommended Video
மும்பை: பயந்தேன், அழுதேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத் படத்தில் மன்னன் அலாவுத்தீன் கில்ஜியின் மனைவி மெஹருன்னிசாவாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி.
இந்நிலையில் படம் குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
கில்ஜி
பத்மாவத் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்திற்காக பலர் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்பது எனக்கு தெரியும்.
செட்
பத்மாவத் பட செட்டில் இருந்த அனைவரும் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்தனர். அனைவரின் பிரார்த்தனை தான் படத்தை வெற்றி பெற செய்துள்ளது.
போஸ்டர்
என் கதாபாத்திரம் சர்பிரைஸாக இருக்கட்டும் என்று நினைத்து தான் இயக்குனர் பன்சாலி என் புகைப்படத்தை பத்மாவத் போஸ்டரில் போடவில்லை. என்னை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள சொல்லவில்லை.
மகிழ்ச்சி
படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் என் கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் பாராட்டியதை பார்த்து நான் அழுதுவிட்டேன். என் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
பயம்
ரன்வீர் சிங் செட்டில் இருக்கும் போது கில்ஜியாகவே மாறிவிடுவார். சில சமயம் அவர் என்னை பார்த்தபோது எனக்கு பயமாக இருந்தது. என் கதாபாத்திரம் மிகவும் தைரியமானது என்றார் அதிதி ராவ் ஹைதரி.