Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிம்பு-தனுஷ் கூட்டணி?
போக்கிரி படம் மூலம் தமிழில் இயக்குநரானவர் பிரபுதேவா. அதில் விஜய்யை வைத்து அவர் காட்டிய வித்தைக்கு செமத்தியான வரவேற்பு கிடைத்ததால் மறுபடியும் விஜய்யுடன் இணைகிறார்.
இப்படத்தை முடித்து விட்டு புதிய படம் ஒன்றை தமிழில் இயக்கவுள்ளார் பிரபு தேவா. இப்படத்தில்தான் சிம்புவும், தனுஷும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சிம்பு, தனுஷின் சம்மதத்தையும் பிரபுதேவா பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது, உண்மைதான். இதுதொடர்பாக பிரபுதேவா பேசியுள்ளார். தனுஷுடன் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன். இருவரது திறமைகளுக்கும் பொருத்தமான கதையாக இருந்தால் நிச்சயம் தனுஷுடன் சேர்ந்து நடிப்பேன்.
தனுஷின் நடிப்புத் திறமை எனக்கு நன்றாகவே தெரியும். அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. பிரபுதேவா அருமையான, திறமையான இயக்குநர். மூன்று பேரும் இணைந்தால் நிச்சயம் அது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும். அதில் சந்தேகமே இல்லை என்றார் சிம்பு.
ஆனால் இந்தத் தகவலை தனுஷ் தரப்பு மறுத்துள்ளது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறுகையில், அப்படி எந்தப் படத்திலும் தனுஷ் ஒப்பந்தமாகவில்லை. இது நல்ல கற்பனை என்றார்.
தற்போது பிரபுதேவா, இந்தியில் சல்மான் கானை வைத்து 'வான்டட் டெட் ஆர் அலைவ்' (போக்கிரி படத்தின் ரீமேக் டைட்டில் இது) என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதை முடித்து விட்டு, ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போகிறார்.
சிம்பு, தனுஷை வைத்து பிரபு தேவா படம் இயக்குவது உண்மையாக இருந்தால், நிச்சயம் அது திரை ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.