Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பைக் சவாரி... சைலன்ஸரில் காலைச் சுட்டுக் கொண்ட சந்தியா!
காதல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி கொஞ்ச நாள் பரபரவென நடித்து வந்தார் சந்தியா. இப்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஓரிரு தெலுங்குப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் த்ரீ கிங்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கேரளாவில் சாலக்குடி அருகே உள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி அருகே நடந்தது. கதாநாயகன் இந்திரஜித்தும் சந்தியாவும் பைக்கில் செல்வது போன்று காட்சி எடுத்தனர். மழையால் ரோடு சகதியாக இருந்தது. அதில் வேகமாகச் சென்றபோது பைக் சிக்கியது.
சந்தியா நிலைதடுமாறி கீழே விழுந்தார். கையில் பலத்த அடிபட்டது காலில் சைலன்ஸர் சுட்டு தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
"நான் விழுந்த இடத்துக்குப் பக்கத்தில் பெரிய பள்ளம் இருந்தது. நிறைய தண்ணீர் வேறு. அதிர்ஷ்டவசமாக அதில் விழாமல் தப்பினேன். இப்போது காயத்துக்கு மருந்து போட்டுள்ளனர். ஓட்ட லில் ஓய்வு எடுத்து வருகிறேன். காயம் குணமான பிறகு மீண்டும் நடிக்க வந்துவிடுவேன்," என்றார் விபத்து குறித்துப் பேசிய சந்தியா.