Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காத்திருக்கும் கீர்த்தி
அழகு, நடிப்பு, நடனம், கவர்ச்சி என சகலகலா வல்லியாக திகழ்ந்தும் கூட கீர்த்தி சாவ்லா, இன்னும், 'வாவ்'லா என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு பெரிய இடத்திற்கு வர முடியாமல் தவிக்கிறார்.
உளியின் ஓசையில் நடிப்பில் கலக்கினார். நாயகன் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வந்து போனார்.
இந்த நிலையில் இப்போது மகேஷ், சந்தியா மற்றும் பலர் படத்தையும், திருமதி தமிழ் படத்தையும் ரொம்பவே ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளார்.
அதிலும் திருமதி தமிழ் படம்தான் கீர்த்திக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவயானி தயாரிக்க, அவரது கணவர் ராஜகுமாரன் நடித்து, இயக்கும் படம் இது.
இப்படத்தில் தேவயானி நீதிபதியாக வருகிறாராம். இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைக் கொண்டது. இதுதான் கீர்த்தியின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம்.
படத்தில் பிருத்விராஜ் நெகட்டிவ் கேரக்டரில் வருகிறார். படம் முழுக்க கீர்த்திக்கு நன்கு நடிக்கும் வாய்ப்பாம். எனவேதான் இப்படம் தனது மறுபக்கத்தை காட்ட உதவும் என்கிறார் நம்பிக்கையுடன்.
எஸ்.வி.சேகர் தயாரிக்க, அவரது மகன் அஷ்வின் நடிக்க உருவாகும் நினைவில் நின்றவள் படத்திலும் கீர்த்தி நடிக்கவுள்ளாராம்.
நிச்சயமாக, இந்த ஆண்டு கீர்த்திக்கு கீர்த்தி தரும் ஆண்டாக அமையும் என்று நாமும் நம்புவோம்.