Don't Miss!
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஸ்பாட் ஃபிக்சிங்சில் சிக்கிய ஸ்ரீசாந்த்… உடன் சுற்றிய நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
மும்பை: ஐ.பி.எல் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு சிறை சென்றதற்கு பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சியடைந்துள்ளார்.
வசந்த் இயக்கத்தில் வெளியான மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்தவர் சுர்வீன் சாவ்லா. இவர் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உடன் இணைந்து நடனமாடியுள்ளார். இதனால் இருவருக்கும் காதல் அரும்பியதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் ஐ.பி.எல் சூதாட்டப் புகாரில் சிக்கை கைதானார் ஸ்ரீசாந்த்.
நடிகை அதிர்ச்சி
இந்த சம்பவம் பற்றி செய்தியாளர்கள் சுர்வீன் சாவ்லாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் கைதான தகவல் வந்தபோது நான் கேன்ஸ் படவிழாவில் இருந்தேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் எனக்கு அதிர்ச்சி அளித்தன.
இப்போ தொடர்பு இல்லை
ஸ்ரீசாந்தும் நானும் நண்பர்களாக இருந்தோம். ஆனால் சமீபகாலமாக அவருடன் நான் தொடர்பில் இல்லை.
எனக்கு வருத்தமளிக்கிறது
ஸ்ரீசாந்த் கேரள மக்களை கிரிக்கெட்டுக்கு கொண்டுவர ஒரு உந்துதலாக இருந்தார். பணத்தாசை மனிதர்களை எப்படியெல்லாமோ குப்புற தள்ளிவிடுகிறது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார் சுர்வீன் சாவ்லா.