Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷமாச்சு... ஆனாலும் அந்த ஆசை அப்படியேதான் இருக்கு... ஏக்கத்தில் டாப்ஸி
சென்னை: சினிமாவுக்கு வந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் அந்த ஆசை அப்படியே இருக்கிறது என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தமிழில், வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. தெலுங்கிலும் நடித்து வந்த அவர், தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். இந்தி சினிமாவுக்கும் சென்றார்.
அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2 உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இதையடுத்து அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார் டாப்ஸி.
மித்தாலி ராஜ்
இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.
பரிசோதனை
இந்நிலையில் அவர் சினிமாவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் ஆகியுள்ளன. இதுபற்றி அவர் கூறும்போது, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற திட்டம் ஏதுமில்லாமல், பரிசோதனை முயற்சியாகவே நடித்தேன்.
இந்திக்கு செல்ல
என் முதல் படம், ஜும்மான்டி நாடம் மூலமாக தெலுங்கில் அறிமுகமானேன். பத்து படங்கள் தமிழ், தெலுங்கில் நடித்துவிட்டு இந்திக்குச் சென்றேன். இந்தி சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பாக, தென்னிந்திய சினிமாவை நான் பயன்படுத்தவில்லை.
கற்றுக்கொண்டேன்
நான் இங்கும் அங்குமாகத் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன். ஆரம்பத்தில் தென்னிந்திய படங்கள் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.
திருப்பு முனை
இந்தியில் பிங்க் படம் எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது. இதற்கு பிறகு என்னிடம் நிறைய எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். எனக்கும் என் கேரியரில் தெளிவான பாதை கிடைத்தது. என் படத்தை பார்க்கும் ரசிகர்கள், அதில் இருந்து எதையாவது நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
அழுத்தமான கதை
அதனால் அழுத்தமான, தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன்' என்கிறார். 'பல்வேறு கேரக்டர்களில் நடித்துவிட்டாலும், இந்திய சூப்பர் ஹீரோ கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அந்தக் கனவு அப்படியே இருக்கிறது' என்கிறார் டாப்ஸி.