Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'புளூ பிலிம்ஸ்' என் அரிய பொக்கிஷம்: ராம் கோபால் வர்மா!
சர்ச்சையின் மறுபெயர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மாவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நாங்கள் ஒன்றும் சும்மா அப்படி சொல்லவில்லை. காரணம் இருக்கு. பாட்ஷா படத்தில் ரஜினி நின்றால், நடந்தால், சிரித்தால், பேசினால் அழகு என்று பாடுவார் நக்மா. அதற்கு மாறாக இயக்குனர் ராம் கோபால் வர்மா நின்றால், பேசினால், படம் எடுத்தால் சர்ச்சை தான்.
அண்மையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது நீங்கள் எதை விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் உடனே என்னுடைய புளூ பிலிம்ஸ் கலெக்ஷன் தான் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
என்ன தான் சினிமாத் துறையே அவரை சகட்டுமேனிக்கு விமர்சித்தாலும் மனுஷன் மசிவதாக இல்லை. நீங்கள் பேசுவதைப் பேசுங்கள், நான் இப்படித் தான் இருப்பேன் என்கிறார்.
நான் மற்றவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு படம் எடுக்க ரொம்பப் பிடிக்கும். அதை மக்கள் சில நேரம் ஜிரணித்தாகத் தான் வேண்டும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இசையைக் கேட்டுக் கொண்டும், படம் இயக்கிக் கொண்டும், அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டும் கழிக்க விரும்புகிறேன் என்றார்.
பிறர் என்னை விமர்சிப்பதை நான் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது தான் அவர்களுக்கு கடுப்பாக உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.