Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய ரஜினி மகள்!
சென்னை: கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் உட்பட மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
ரம்ஜான் ஸ்பெஷல்: அமிதாப் பச்சன் முதல் பிக் பாஸ் ஆஜீத் வரை.. ஈகைத் திருநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து!
கொரோனாவை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் கோரிக்கை
இந்நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
சன்டிவி குழுமம்
இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். சன் டிவி குழுமம் தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக 30 கோடி ரூபாய் வழங்கியது. இதேபோல் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து ஒரு கோடி வழங்கினர்.
ரஜினி மகள்
நடிகர் அஜித், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். இயக்குநர் சிஎஸ் அமுதன் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
நிறுவனத்தின் சார்பாக
தனது நிறுவனத்தின் சார்பாக சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சவுந்தர்யா மே 6 எண்டெர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சவுந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது.