Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இவருக்கு எப்ப கல்யாணம் நடந்தது? சொல்லவே இல்லை.. பெண் குழந்தைக்கு அம்மா ஆன நடிகை பூஜா குமார்!
சென்னை: பிரபல நடிகை பூஜா குமார், பெண் குழந்தைக்கு அம்மாவாகி இருப்பதாக அவர் கணவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பூஜா குமார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இவர் தமிழில், காதல் ரோஜாவே என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
ஆங்கிலம், இந்தி
கேயார் இயக்கிய இந்தப் படத்தில் ஜார்ஜ் விஷ்ணு என்ற புதுமுகம் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தப் படம் அதிகம் கவனிக்கப்படவில்லை. இதையடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார், நடிகை பூஜா.
உத்தம வில்லன்
பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு விஸ்வரூபம் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார். இதில் கமல்ஹாசன் ஜோடியாக அவர் நடித்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, கமல்ஹாசனின், உத்தம வில்லன், பிரபு நடித்த மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2 உட்பட சில படங்களில் நடித்தார்.
ரகசியமாக திருமணம்
இவருக்கும் விஷால் ஜோஷி என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தும் இருவரும் இதுபற்றி வெளியே சொல்லவில்லை.
பெண் குழந்தை
இந்நிலையில், பூஜா குமாரின் கணவர் விஷால் ஜோஷி, தங்களின் பெண் குழந்தையை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தி உள்ளார். கார்ப்பரேட் நிறுவனம் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் ஜோஷி, இதுபற்றி இன்ஸ்டாகிராமில் டச்சிங்காக கூறி இருப்பதாவது:
நாவ்யா ஜோஷி
"ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேராக இருந்தோம். இப்போது மூவராக இருக்கிறோம். நானும் பூஜா குமாரும் எங்கள் மகள் நாவ்யா ஜோஷியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எனக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கும், குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு தந்ததற்கும் பூஜாவுக்கு நன்றி.
மாற்றி இருக்கிறீர்கள்
என்னுடைய இந்த பிறந்த நாளை மிகச் சிறந்த பிறந்த நாளாக மாற்றி இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் நன்றி. இவ்வாறு கூறியுள்ளார். கூடவே குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் அவர்களுக்கும் குழந்தைக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.