Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிவாஜியின் ‘கலையுலக’ வாரிசான கமல் ‘செவாலியே’வையும் மிச்சம் வைக்கவில்லை!
சென்னை: மறைந்த நடிகர் செவாலியே சிவாஜி கணேசனின் கலையுலக வாரிசாக நடிகர் கமல்ஹாசன் கருதப் படுகிறார்.
காரணம் சிவாஜியைப் போலவே கமலும் வித்தியாசமான வேடங்களில் ஆர்வமாக நடித்து வருவது தான்.
அந்தவகையில் விருது பெறுவதிலும் சிவாஜியின் கலையுலக வாரிசாகவே சிறந்த நடிப்பாற்றலுக்காக செவாலியேவைப் பெற்றுள்ளார் கமல்.
தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட நினைப்பதில் சிவாஜியைப் போலவே கமலும் வித்தகர். நடிப்பிற்காக தனது உருவத்தை எப்படியும் மாற்றிக் கொள்ள இருவருமே தயங்காதவர்கள்.
நவராத்திரி படத்தில் ஒன்பது வேடத்தில் நடித்து வித்தியாசமான முயற்சியில் வெற்றி பெற்றார் சிவாஜி. ஆனால், அவரையும் விட கூடுதலாக ஒரு வேடத்தில், அதாவது பத்து வேடத்தில் தனது தசாவதாரம் படத்தில் நடித்தார் கமல்.
கடந்த 1997ம் ஆண்டு சிவாஜிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலும் அந்த விருதைப் பெற்றுள்ளார்.
இது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.