முதல் முறையாக தமிழில் பாடிய பப்பிலஹரி!

ரஜினி நடித்த ஜீத் ஹமாரி, மஹாகுரு, பேவாபா, வாஃபாதார், கிராப்தார் போன்ற பல இந்திப் படங்களுக்கு இசை அமைத்தவர். தமிழில் தாய் வீடு, பாடும் வானம்பாடி என சில படங்கள் செய்தார்.
படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இப்போது இல்லாவிட்டாலும், தொடர்ந்து ஆல்பங்கள் செய்வதிலும், பாடகராகவும் பப்பிலஹரி பிஸியாகிவிட்டார்.
குரு படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய பாடல் பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சில படங்களில் பாடினார். சமீபத்தில் தி டர்ட்டி பிக்சர் படத்தில் இவர் பாடிய ஊலலலா பாடலுக்கு ஏக வரவேற்பு.
இப்போது தமிழில் முதல் முறையாகப் பாடுகிறார். கருப்பம்பட்டி படத்தில் இடம்பெறும் 'நாட்டி ராஜா ராஜா..' என்ற பாடலை 'தமிழ்ப்படம்' புகழ் கண்ணன் இசையில் பாடினார்.
இந்தப் பாடலுக்காக அவருக்கு பெரிய தொகையைக் கொடுத்து, மும்பை ஸ்டுடியோவில் வைத்து பதிவு செய்தனர்.
இந்தப் பாடலுக்கு பப்பிலஹரியைப் பிடித்தது ஏன் என்று கேட்டபோது, இயக்குநர் பிரபுராஜ சோழன் கூறுகையில், "கொலவெறிப் பாட்டுக்குப் பிறகு தமிழ் இசை பக்கம் இன்னும் கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது. வித்தியாசமாக செய்யும் போது அது சர்வதேச அளவில் ரீச் ஆகிறது. பப்பிலஹரி சிறப்பாக பாடிக்கொடுத்தார். இசையமைப்பாளர் கண்ணனை வாழ்த்தினார்," என்றார்.
கருப்பம்பட்டி படத்தில் அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











