Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கிளம்பிட்டாங்கய்யா... நேற்று தொடங்கிய எந்திரன் 2-க்கு எதிராக ஆர்ப்பாட்ட அறிவிப்பு!
ரஜினி நடிக்கும் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பிரஸ்மீட்டும் நேற்று நடந்து முடிந்தது.
இந்த நிகழ்வுகள் முடிந்த 24 மணி நேரத்துக்குள் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது.
காரணம் என்ன?
இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்த எமி ஜாக்ஸன் நாயகியாக நடிக்கிறாராம். எனவே அவரை உடனடியாகத் தூக்காவிட்டால், இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கும் அத்தனை இடங்களிலும் வந்து ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவர் கூறியுள்ளார்.
தமிழர் மண்ணில் பிழைப்புக்காக வந்த எமி ஜாக்ஸன் எப்படி தமிழரின் வீர விளையாட்டை தடை செய்ய ஆதரவு தெரிவிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இன்னும் மூன்று தினங்களுக்குள் எமி ஜாக்ஸனை படத்திலிருந்து நீக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
2.0-க்கு இன்னும் எத்தனைப் பஞ்சாயத்து காத்திருக்கோ தெரியலையே!