Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விக்ரம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என நம்பினேன்! - தயாரிப்பாளர் ஷிபு
இருமுகன் படத்தில் விக்ரம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என நம்பினேன். அதுதான் நடந்தது என்று படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் கூறினார்.
விக்ரம் - நயன்தாரா நடித்து அண்மையில் வெளியாகியுள்ள படம் இருமுகன். அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.
இருமுகன் கடந்த வியாழன் அன்று வெளியானது. முதல் இருநாள்களில் எதிர்மறையான விமரிசனங்கள் கிடைத்தாலும் படத்தின் வசூல் ஆரம்பத்திலிருந்தே நல்லவிதமாக இருந்தது. இதனால் படம் ஹிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு வேறு படங்களே இல்லாத நிலையில், முதல் நாளில் வெளியான திரையரங்குகளைக் காட்டிலும் தற்போது அதிக திரையரங்குகளில், காட்சிகளில் படம் ஓடிக் கொண்டுள்ளது.
இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் படத்தில் பணியாற்றிய பிரபல கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
படத்தை வெளியிட்ட ஆரா சினிமாஸ் மகேஷ் கூறுகையில், "இந்த வருட ஹிட் படங்களில் கபாலி, தெறிக்குப் பிறகு அதிகம் வசூலித்த படம் இருமுகன். இரண்டாவது வாரத்தின்போது தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே 450 திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக ரூ. 30 கோடி வசூலித்துள்ளது," என்றார்.
தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் பேசுகையில், "விக்ரம் தயாரிப்பாளர்களின் ஹீரோ. என்னை நம்பியதற்கும் இந்தப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை அளித்ததற்கும் நன்றி என்றார். விக்ரம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என இப்படத்தின் கதையைக் கேட்கும்போதே தெரிந்தது. விக்ரம் போன்ற ஒரு நடிகரால் மட்டுமே இருமுகன் படத்தில் நடிக்கமுடியும்," என்றார்.