Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அந்த ஹீரோ என் கெரியரை கெடுக்கல: பதறும் இளம் நடிகை
திருவனந்தபுரம்: தான் நடிகர் திலீப்பை பற்றி எதுவும் தெரிவிக்கவே இல்லை என்று நடிகை பாமா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் பாமா. கேரளாவை சேர்ந்த பாமா மலையாள படங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார்.
திடீர் என்று அவருக்கு பட வாய்ப்புகள் வெகுவாகக் குறையத் துவங்கியது.
நடிகர்
அண்மையில் மலையாள பத்திரிகையான வனிதாவுக்கு பாமா பேட்டி அளித்தார். தனக்கு பட வாய்ப்புகள் குறைய தான் மதிப்பு வைத்துள்ள சினிமாத் துறையை சேர்ந்த ஒருவரும் இதற்கு காரணம் என்று பாமா தெரிவித்தார்.
திலீப்
பாமா பேட்டியில் பெயரை சொல்லாமல் பேசியது நடிகர் திலீப்பை பற்றி தான். திலீப் தான் பாமாவின் சினிமா வாழ்க்கை அஸ்தமனமாக சதி செய்தது என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.
பாமா
தான் அளித்த பேட்டியை திரித்து பேசுவதை பார்த்த பாமா ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார். பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தான் கூறிய நபர் நடிகர் திலீப் இல்லை என்று பாமா தெரிவித்துள்ளார்.
புகார்
மலையாள திரையுலகை சேர்ந்த நடிகைகள், நடிகர்கள் சிலரின் பட வாய்ப்புகளை திலீப் கெடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் தான் பாமாவின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.