Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தி "ஜிகர்தண்டா" தயாரிப்பாளர்- இயக்குனர் இடையே திடீர் மோதல்!
சென்னை: 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருந்த நிலையில் தற்போது சிலபல பஞ்சாயத்துக்கள் படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பளருக்கும் இடையே எழுந்துள்ளது.
ஜிகர்தண்டா படம் தயாரித்த போதே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும்இடையே முட்டலும் மோதலுமாக இருந்தது படத்திற்கு யூ சர்டிபிகேட் வேண்டுமென்றால் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சாரில் சொன்னபோது அறவே முடியாது என்று மறுத்து விட்டார் கார்த்திக்.
யூ சர்டிபிகேட் கிடைக்காததால் வரிவிலக்கில் கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் லாபம் போய்விட்ட வருத்தத்தில் இருந்த தயாரிப்பாளர் கதிரேசன் தற்போது அதற்கு பழிவாங்கி விட்டார்.
ஹிந்தி பட ரீமேக் உரிமையை கார்த்திக் சுப்புராஜிற்கு தெரியாமல் சில கோடி ரூபாய்க்கு விற்று விட்டார். இதைத் தெரிந்து கொண்ட கார்த்திக் அதில் 40% ராயல்டி கேட்க, தர முடியாது என்று தகராறு செய்கிறாராம் தயாரிப்பாளர்.
படத்தின் கதை கார்த்தியுடையது எனவே அவருக்கு தெரியாமல் படத்தை விற்க முடியாது, விற்றாலும் அவருக்கு உள்ள ராயல்டியானது கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்திருக்கிறாராம் கார்த்திக் விரைவில் இது தொடர்பாக பஞ்சாயத்து நடக்கலாம் என்று கோலிவுட்டில் சொல்கின்றனர்.