Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்
Recommended Video
சென்னை: ஜோதிகா அடுத்த படத்தில் டீச்சராக நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை டீச்சர் கதாபாத்திரம் என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு. பாரதிராஜா படங்களில் வந்த குடைபிடிக்கும் டீச்சரிலிருந்து, நாட்டாமை டீச்சர், குற்றம் கடிதல் படத்தில் வந்த கண்டிப்பான டீச்சர் என சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் அமலா பால் கூட ராட்சசன் படத்தில் டீச்சராக நடித்திருந்தார்.
அந்த வகையில் நடிகை ஜோதிகா மீண்டும் டீச்சர் அவதாரம் எடுக்க உள்ளார். ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் இயக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. அதில் சிவகுமார், சூர்யா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடிக்க உள்ளாராம். அதற்காக சென்னையில் ஒரு பள்ளியின் செட் போடப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரமே படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.