Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இளம் நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர்: காரணம் தகாத ஆசை
மும்பை: போஜ்புரி நடிகர் பவன் சிங் நடிகை அக்ஷரா சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் பவன் சிங். படங்களில் நடிப்பதுடன் பாடல்களும் பாடி வருகிறார். அவரும், நடிகை அக்ஷரா சிங்கும்(25) காதலித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் பவன் சிங்கிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அக்ஷரா பவனுடனான நட்பை முறித்துக் கொண்டார். ஆனால் பவன் சிங்கிற்கு அக்ஷராவுடனான நட்பை தொடர விருப்பமாக இருந்தது. இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து பவன் அக்ஷராவின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையடுத்து அக்ஷரா மும்பை போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் பவன் சிங் மற்றும் அவரின் நண்பரும், பாடகருமான விஷ்ணு பிரகாஷ் திவாரி என்கிற சூர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அக்ஷரா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
View this post on InstagramA post shared by Bhojpuri Dangal News 🇮🇳 (@bhojpuridangalnews) on
பவன் சிங்கிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணமானது. அதன் பிறகு அவருடனான நட்பை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அவருக்கு நட்பை முறிக்க விருப்பம் இல்லை. நாம் நட்பை தொடரலாம் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
டிரெய்லரில் ரஜினியை கலாய்த்தது ஏன்?.. கோமாளி பட இயக்குனர் விளக்கம்.. ஆனா ஏத்துக்குற மாதிரி இல்லையே!
என்னுடன் நட்பில் இல்லை என்றால் உன்னை படங்களில் நடிக்க விட மாட்டேன் என்று மிரட்டினார் பவன். மேலும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். பவன் குடிபோதையில் இருந்தபோது அவரை நான் கவனித்துக் கொண்டேன். அவர் பயணம் செய்யும்போது அவரின் உடைமைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் அவரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியதால் அவர் என் புகைப்படங்களை வைத்து ஆபாச படங்கள், வீடியோக்களை உருவாக்கி ஆன்லைனில் வெளியிட்டார். பவன் பிரச்சனையை நானே சமாளித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அத்துமீறி சென்றதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இனியும் இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் போராடத் துணிந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் அக்ஷரா சிங்.