Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மகேஷ் பாபுவின் பாலிவுட் பஞ்சாயத்து.. இத்தனை பிரபலங்கள் என்ன சொல்லி விளாசியிருக்காங்கன்னு பாருங்க!
ஹைதராபாத்: இந்தி திரைப்படங்களில் தனக்கு நடிக்க ஆர்வமில்லை என்றும் பாலிவுட் சினிமாவால் தனக்கான சம்பளத்தை தர முடியாது என்றும் மகேஷ் பாபு பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சமீபத்தில் நடந்த மேஜர் எனும் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, இந்தி படங்களில் எப்போது உங்களை பார்க்கலாம் என்கிற கேள்விக்கு மகேஷ் பாபு இப்படி பட்டென்று பதில் அளித்து விட்டார்.
இந்நிலையி,ல் பாலிவுட்டின் தயாரிப்பாளரான முகேஷ் பாட், இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட சிலர் அவரது கருத்துக்கு பதில் அளித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இந்தி திரையுலகம் எனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாதுன்னு சொன்ன மகேஷ் பாபு.. இத்தனை கோடி சம்பளமா?
பாலிவுட் பஞ்சாயத்து
அஜய் தேவ்கன் சமீபத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கு போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு பாலிவுட் படங்களால் தனக்கான சம்பளத்தை தர முடியாது என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும், தெலுங்கு சினிமாவில் நடிப்பதே தனக்கு சந்தோஷம் என்றும் மகேஷ் பாபு கூறியுள்ளார்.
முகேஷ் பாட் கருத்து
பாலிவுட் திரையுலகத்தால் உங்களுக்கான சம்பளத்தை கொடுக்க முடியவில்லை என்பது சந்தோஷமான விஷயம் தான். டோலிவுட்டில் உங்கள் வளர்ச்சி அந்த அளவில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மகேஷ் பாபு மீது எனக்கு நிறையவே மரியாதை உள்ளது. ஆனால், சமீப காலமாக நடிகர்களை விலைப்பட்டியல் வைத்து மதிப்பிடுவது ஏன் தான் என்று தெரியவில்லை என விளாசி உள்ளார். மேலும், சில பெரிய நடிகர்கள் நல்ல கதைகளை கேட்டு பாதி சம்பளத்துக்கு எல்லாம் பணியாற்றி வருகின்றனர் என்றும் மகேஷ் பாபுவுக்கு உணர்த்தும் வகையில் பேசி உள்ளார்.
எனக்கு புரியல
தெலுங்கு படங்கள் இந்தியில் டப் ஆகித் தான் மிகப்பெரிய வசூல் வேட்டையை சமீப காலமாக பெற்றுள்ளன. இதில், மகேஷ் பாபுவுக்கான சம்பளத்தை தர பாலிவுட் சினிமாவால் முடியாது என அவர் எப்படி சொன்னார் என்றே எனக்கு புரியவில்லை என இயக்குநர் ராம் கோபால் வர்மா விளாசி உள்ளார்.
சோஷியல் மீடியா சதி
தென்னிந்திய படங்களுக்கும் இந்தி படங்களுக்கும் இடையே இப்படி சண்டையை கொளுத்திப் போடுவது சோஷியல் மீடியா சதி என பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது கருத்தை தெரிவித்துள்ளார். எந்த படத்தை பார்க்க வேண்டும், பார்க்கக் கூடாது என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறிய அவர், சமீப காலமாக பாலிவுட் இயக்குநர்கள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்கள் எடுக்காதது தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுத்துள்ளது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.