Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அந்த மாதிரி கதைகளை எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்... தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வேண்டுகோள்!
சென்னை : தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.
கடைசியாக இந்த நிறுவனம் கார்த்தியின் கைதி மற்றும் சுல்தான் ஆகிய படங்களை தயாரித்து இருந்தது.
அமைதியைத் தகர்த்தெறியுங்கள்… பெண்களுக்கு ஜோதிகா அட்வைஸ் !
இப்பொழுது தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிக்கும் ஓகே ஓக ஜீவிதம் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த மாதிரி கதைகளை எழுதுவதை நிறுத்துங்கள் என தமிழ் இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெற்றியுடன் கூடிய வசூலை
கார்த்தியின் சகுனி படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு. மிகக்குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி வெற்றியுடன் கூடிய வசூலையும் அள்ளி வரும் எஸ்ஆர் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.
ஓகே ஓக ஜீவிதம்
ஜோக்கர்,காஷ்மோரா ,அருவி, கூட்டத்தில் ஒருத்தன், தீரன் அதிகாரம் ஒன்று ,என்ஜிகே, ராட்சசி, கைதி மாற்றம் கார்த்திக்கு கடைசியாக வெளியான சுல்தான் உள்ளிட்ட படங்களை எஸ் ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்பொழுது அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிப்பில் உருவாகும் ஓகே ஓக ஜீவிதம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் தமிழில் கணம் என்ற பெயரில் தயாராகி வருகிறது.
ஒரே பேட்டனில் திரைப்படங்கள்
பெரும்பாலும் அறிமுக இயக்குனர்களின் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட எஸ்ஆர் பிரபு இப்பொழுது வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். என்னதான் தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருந்தாலும் அது எங்கேயோ பார்த்த கதை களத்தில் இருப்பது பலரும் அறிந்ததே. காதல்,ஆக்சன், ஹாரர் ,காமெடி மற்றும் சைக்கோ த்ரில்லர் என ஒரே பேட்டனில் திரைப்படங்கள் வெளியாகி கொண்டுள்ளது.
டெட் லஸ்ஸோ, செக்ஸ் எடுக்கேஷன்
எனவே அது போன்ற வழக்கமான கதைகளை எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். டெட் லஸ்ஸோ, செக்ஸ் எடுக்கேஷன் உள்ளிட்ட வெப்சீரிஸ் போல வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கிறேன். எனவே சைக்கோ, ஹாரர், த்ரில்லர் போன்ற கதைகளை தமிழ் இயக்குனர்கள் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.
Recommended Video
எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்
புதிய மொழி புதிய கலாச்சாரம் மற்றும் பல்வேறு பண்பாடுகளை கொண்ட பல வித்தியாசமான கதைகள் இங்கு இருக்கு கூற . எனவே அது போன்ற படங்களை எடுங்கள் என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.