Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிரிப்பு..ஆன்மீகம் பற்றிய கலந்துரையாடல்… நகைச்சுவை நடிகர் சதீஷ் பங்கேற்பு !
சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி 'சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்' என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதில் நகைச்சுவை நடிகர் சதீஷ் பங்கேற்ற நிகழ்ச்சி நாளை காலை ஒளிபரப்பாக உள்ளது.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே . சிரிப்பு மற்றும் ஆன்மீகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். இதில் பல பிரபலங்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாடி வருகின்றனர்.
முற்றிலும் நகைச்சுவை நிறைந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் சதீஷ் கலந்து கொண்டு சிரிப்பு - ஆன்மீகம் பற்றி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாட இருக்கிறார். அக்டோபர் 4, ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
அச்சச்சோ.. ரியோ என்ன இப்படி சொல்லிட்டாரு.. பிக்பாஸ் ஆரம்பிக்கிறதுக்குள்ள என்னலாம் பண்ண போறாங்களோ!
தனிப்பட்ட வாழ்க்கை
சிரிப்பு ஒரு டானிக்: சிரிப்பு என்பது மனிதனுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். சிரிப்பு மனிதனின் கவலை போக்கக்கூடியது என்றும், ஒருவர் விரும்பும்போது எவ்வளவு வேண்டுமானாலும் சிரிக்கலாம். இதன் மூலம் அவருக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்று ஆன்மிக குரு ரவிசங்கர் உறுதியளிக்கிறார். இந்த கலந்துரையாடலில் கேமராவிற்கு வெளியே பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும் நடிப்பு என்று வந்தவுடன் ரசிகர்களை மகிழ்விக்கும் நகைச்சுவை நடிகரை பற்றி கருத்து என்ன என்று சதீஷ் கேட்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கும் பலர் சினிமாவில் நகைச்சுவை மூலம் பிரபலமடைந்துள்ளனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை கூறி அற்புதமாக பதில் அளிக்கிறார் ஆன்மிக குரு ரவிசங்கர் .
தனித்துவமான பொருத்தத்தை
மக்களின் மூடநம்பிக்கைகள் குறித்த அடுத்த கேள்வியை முன்வைக்கிறார் நடிகர் சதீஷ். குருதேவ் அது குறித்து பல்வேறு சம்பவங்களை கூறுகிறார். தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். மூட நம்பிக்கைகளானது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது என்றும் ஒவ்வொரு விஷயத்திலும் இது ஒரு தனித்துவமான பொருத்தத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
பயிற்சி மூலம்
புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தி பற்றிய கேள்வியை முன் வைக்கிறார் சதீஷ். எதிர்காலத்தை முன்னரே அறியக்கூடிய நபர்களுடனான தனது சந்திப்புகளை பற்றி அவர் பகிர்ந்துகொள்கிறார், மேலும் இந்த சிறப்பியல்பு உணர்வுகளை அவர்கள் எவ்வாறு பெறுகிறார்கள் என்பது குறித்தும் அவர் ஆச்சரியப்படுகிறார். இதற்கு பதிலளிக்கையில், சிலர் உண்மையில் இதுபோன்ற சக்திகளுடன் பிறக்கிறார்கள் என்றும்; மேலும் சிலர் அதை தியானம் மற்றும் பயிற்சி மூலம் பெறுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.
முன்னணி கேபிள் நெட்வொர்க்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க் மற்றும் டிடிஎச் தளங்களான சன் டைரக்ட்டில் சேனல் எண்.128, டாடா ஸ்கையில் சேனல் எண்.1515, ஏர்டெல்லில் சேனல் எண்.763, டிஷ் டிவியில் சேனல் எண்.1808 மற்றும் வீடியோகான் டி2எச்சில் சேனல் எண்.553-ல் ஒளிபரப்பாகிறது. அக்டோபர் 4, நாளை ஞாயிறு காலை 11 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியை காண பல ஆன்மிகவாதிகளும் காமெடி பெரியார்களும் காத்து கொண்டு இருக்கின்றனர்.