Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என்கிட்ட பளார் என்று அறை வாங்க இன்று ரெடியா இருங்க வாராகி.. ஸ்ரீரெட்டி வார்னிங்!
தன்னிடம் பளார் என்று அறை வாங்க ரெடியாக இருக்குமாறு இயக்குநரும் நடிகருமான வாராகிக்கு நடிகை ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: தன்னிடம் பளார் என்று அறை வாங்க ரெடியாக இருக்குமாறு இயக்குநரும் நடிகருமான வாராகிக்கு நடிகை ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டியின் பெயரை கேட்டாலே தெலுங்கு, தமிழ் திரையுலகங்கள் நடுங்குகின்றனர். அந்த அளவுக்கு பீதியை கிளப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி.
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் தனக்கு பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னை பாலியல் உறவுக்காக பயன்படுத்திக்கொண்டதாக புகார் கூறிய ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார்.
வாராகி புகார்
தமிழில் இயக்குநர்கள் ஏஆர் முருகதாஸ், சுந்தர் சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகரும் இயக்குநருமான வாராகி, ஸ்ரீ ரெட்டி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
விபச்சாரம்
பணம் பறிக்கும் நோக்கத்தில் அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறும் ஸ்ரீரெட்டியை விபச்சார தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார் வாராகி.
ஸ்ரீரெட்டி அப்செட்
இதனால் உச்சக்கட்ட அப்செட்டில் உள்ளார் ஸ்ரீரெட்டி. தான் பாலியல் தொழிலாளி இல்லை என்றும், தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெளியே அனுப்பினார்கள், யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட பெறவில்லை என பேஸ்புக்கில் விளக்கம் அளித்திருந்தார்.
அறை வாங்க தயாரா இரு
இந்நிலையில் தன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த வாராகியை இன்று காலையிலேயே தனது பேஸ்புக் வாயிலாக விளாசியுள்ளார் ஸ்ரீரெட்டி. அவர் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், இன்று என்னிடம் இறுக்கமான அறை வாங்க தயாராக இருங்கள் வாராகி.
காரிதுப்பிய ஸ்ரீரெட்டி
என்னிடம் பளார் வாங்க தகுதியானவர் நீங்கள். எப்போது பாதிக்கப்பட்டவருக்கு மரியாதை அளிப்பதற்கு பதில் என் மலத்தை சாப்பிட ஆரம்பித்து விட்டீர். மலிவான விளம்பரம் தேட நடிக்கிறாய்.. தூ.. என காரி துப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி.
கார்த்தி மீது புகார்
ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு விளம்பரம் தேட நடிகர் கார்த்தி தனது பெயரை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார் ஸ்ரீரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.