Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அனைத்து முக்கிய பதவிகளையும் கைப்பற்றியது விஷால் அணி
சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அனைத்து முக்கியப் பதவிகளையும் நடிகர் விஷால் அணி கைப்பற்றியுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நிர்வாக பொறுப்பை வகிந்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் நம்ம அணி என்று உருவாக்கப்பட்டது. இந்த அணி இந்தத் தேர்தலில் அனைத்து முக்கியப் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்த அணியின் சார்பில் அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ஜ், கெளதம்வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
விஷால் அணியில் விஷால், ஞானவேல்ராஜ், மி்ஷ்கின், கதிரேசன், எஸ்.ஆர். பிரபு, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் வெறஅறி பெற்றனர். ஞானவேல்ராஜா, மிஷ்கின் ஆகியோர் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டனர். பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் துணைத் தலைவர்களாகத் தேர்வாயினர்.
எஸ்.ஆர். பிரபு, பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.