Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஊட்டிப் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் பிரஜின் - சான்ட்ரா தலைமறைவு
புரபைல் விஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் சுற்றுலா. இந்த படத்தில் புதுமுக கதாநாயகனாக மிதுன், புதுமுக கதாநாயகியாக ஸ்ரீஜி ஆகியோர் நடிக்கிறார்கள். ராஜேஷ் படத்தினை இயக்குகிறார். பரணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 27 நாட்களாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு குழுவினர் ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். இந்த படத்தில் டிவி நடிகர் பிரஜன், கதாநாயகியின் தோழியாக அவரது மனைவி நடிகை சான்ட்ரா ஆகியோர் நடித்து வந்தனர். இவர்களும் ஊட்டியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று குன்னூர் அருகே உள்ள மேல்குன்னூர் அம்பேத்கார் நகர் பக்கம் உள்ள ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. நேற்று படப்பிடிப்பு நடக்க இருந்த இடத்துக்கு படப்பிடிப்பு குழுவினர் வந்தனர். ஆனால் நடிகர் பிரஜன், நடிகை சான்ட்ரா மட்டும் வரவில்லை.
அவர்கள் திடீரென்று மாயம் ஆனதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சுற்றுலா படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டராமன், தயாரிப்பு மேலாளர்கள் அருணாசலம், பாரதி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், "நடிகர் பிரஜன், துணை நடிகை சாந்த்ரா ஆகியோர் நேற்று திடீரென்று மாயமாகி விட்டனர். எங்கு சென்றார்கள்? என்று யாருக்கும் தெரியவில்லை. நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் 160 நாட்கள் கால்ஷீட் பெற்றிருந்தோம்.
இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. படப்பிடிப்பு ரத்து ஆனதால் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் நஷ்டம் ஆகி உள்ளது. இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளோம்," என்றனர்.