Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சரமாரியாக விளாசும் ஐஸ்வர்யா.. விழிபிதுங்கி நிற்கும் வைஷ்ணவி.. களைகட்டும் பிக்பாஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவியை ஐஸ்வர்யா சரமாரியாக ஏறும் புரமோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவியை ஐஸ்வர்யா சரமாரியாக ஏறும் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வைஷ்ணவி புறம்பேசுவார், போட்டுக்கொடுப்பார் என்றே மக்கள் மனதில் பதிந்துள்ளது.
வைஷ்ணவியின் நடவடிக்கை அப்படியே ஜூலியை போன்று இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
முகத்திரையை கிழித்துவிடுவேன்
கடந்த வாரம் நிகழ்ச்சியின் போது 5 நிமிடம் கொடுத்தால் போதும் அனைவரின் முகத்திரையையும் கிழித்துவிடுவேன் என கண்ணீர்மல்க பேசினார் வைஷ்ணவி.
முகத்திரையை கிழியுங்கள்
இதனைக்கேட்ட கமல் வைஷ்ணவிக்கு 5 நிமிடம் கொடுத்து அவரது முகத்திரையை கிழியுங்கள் என எவ்வளவோ கேட்டும் முகத்திரையை கிழிக்க மறுத்துவிட்டார் வைஷ்ணவி.
ஏதோ ஏடாகூடம்
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் புரமோ வெளியாகியுள்ளது. அதில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் வைஷ்ணவி ஏதோ ஏடாகூடமாக செய்துவிட்டதாக தெரிகிறது.
கத்தும் ஐஸ்வர்யா
அதற்காக ஐஸ்வர்யா அவரை பிடித்து ஏறு ஏறு என ஏறுகிறார். கத்திபேசும் ஐஸ்வர்யாவை கத்தாதே என்கிறார் வைஷ்ணவி.
மகத்தை காப்பாற்ற
அதற்கு நான் கத்துவேன் தான் கத்துவேன்னா கத்துவேன் என வைஷ்ணவியை தாளித்து விடுகிறார். பின்னர் மகத்தை காப்பாற்றவே யாஷிகா கையை கட்டினேன் என்கிறார் வைஷ்ணவி.
எதற்காக சண்டை?
அப்போதும் விடாமல் வைஷ்ணவியை விளாசி தள்ளுகிறார். இந்த சண்டை எதற்காக வந்தது? வைஷ்ணவி என்ன செய்தார்? என்பது இன்றிரவு தெரியவரும்.