Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எஸ்பிபிக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருது
திரையுலகில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க பாடகி பி சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.
ஆண்டுதோறும் இந்த 'சுசீலா விருது' வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெறுகிறார். ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. நவம்பர் 14ம் தேதி ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் விழா நடக்கிறது.
இந்த விழாவில் இசையமைப்பாளர்கள் பாலமுரளிகிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, டிஎம் சவுந்திரராஜன், எஸ்.ஜானகி, பி.பி.சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
யூ.கே.முரளி இசையில் இந்த மேதைகள் பாட ஒப்புக் கொண்டுள்ளதாக சுசீலா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரளும் நிதியில் பாதி, ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விழாவுக்கு கமல்ஹாஸன் தலைமை தாங்குகிறார்.