Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மாதவன் பெயரை டாட்டூவாக்கிய ரசிகை... நெகிழ்ச்சியில் நடிகர்
சென்னை : கோலிவுட், பாலிவுட் என பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் மாதவன்.
தற்போது ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் அதிரடி கைது.. போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியதால் நடவடிக்கை!
இவருக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படும் நிலையில் இவரது பெயரை தனது கையில் ரசிகை ஒருவர் டாட்டூவாக குத்தியுள்ளார்.
பரபரப்பான நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் கோலிவுட், பாலிவுட் என பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். விக்ரம் வேதா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இயக்குநர் அவதாரம்
இந்நிலையில் தற்போது ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தை முதல் முறையாக இயக்கி வருகிறார். இந்த படத்தில் லீட் கதாபாத்திரத்தில் மாதவனே நடித்து வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியாக உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்ரி நம்பி விளைவு
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. மிகுந்த அன்பு மற்றும் அக்கறையுடன் இந்தப் படத்தை உருவாக்கி உள்ளதாகவும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என்றும் மாதவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஏராளமான ரசிகர்கள்
மாதவனுக்கு ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகள் அதிகளவில் காணப்படுகின்றனர். இதனிடையே சமீபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவரது ரசிகை ஒருவர் தனது கையில் மாதவனின் பெயரை பச்சை குத்தியுள்ளார். மேலும் இது தற்காலிக டாட்டூ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெகிழ்ந்த மாதவன்
அவரது இந்த செயலால் நெகிழ்ந்த மாதவன், அவருக்கு லவ் உள்ளிட்ட எமோஜிக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்புடன் செயல்பட்டு வரும் மாதவன் முதல் முயற்சியாக இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.