Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தடுப்பூசி போட்டாச்சு... நடிகை நதியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது
மும்பை : 1990 களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நதியா. ரஜினி, பிரபு, சத்யராஜ், சுரேஷ், மோகன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியவர்.
சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, அவ்வப்போது இந்தியா வந்து படங்களில் நடித்து வந்தார். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுவின் 50 வது படமான ராஜகுமாரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
பிறகு ஜெயம் ரவிக்கு அம்மாவாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்து, அனைவரின் மனதிலும் அழுத்தமான இடத்தை பிடித்தார். அழகான, இளமையான அம்மாவாக நடித்து அசத்திய நதியாவிற்கு தமிழிலும் பட வாய்ப்புக்கள் குவிந்தன.
கணவன் மற்றும் இரு மகள்களுடன் அமெரிக்காவில் இருந்து லண்டனில் குடியேறினார். சமீபத்தில் மும்பையில் வந்து குடும்பத்துடன் செட்டில் ஆனார். அவ்வப்போது யோகா, ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தார். இளமை சீக்ரெட்டையும், உடற்பயிற்சியின் அவசியத்தையும் உணர்த்தி வரும் நதியா, சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசி முழுவதையும் போட்டுக் கொண்டார்.
Recommended Video
இந்நிலையில் நதியாவிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சினிமாக்களில் அரிதாக நடித்து வரும் நதியா, விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கதை நன்றாக இருந்தால் மட்டுமே சினிமாக்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
கொரோனாவில் இருந்து நம்மையும், நமது குடும்பத்தாரையும் காத்துக் கொள்ள அனைவரும் சீக்கிரம் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என வலியுறுத்தி வந்தவர் நதியா. இவர் மே மாதம் தான் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நதியா தற்போது மலையாளம் த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தையும் ஜீத்து ஜோசப் தான் இயக்கி வருகிறார். இதே போல் த்ரிஷ்யம் 2 தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்தில் முதல் முறையாக கமலுக்கு ஜோடியாக நடிக்க நதியாவுடன் பேசப்பட்டு வருகிறது.
கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சாய் பல்லவி.. ஹீரோ யார் தெரியுமா!