Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நீத்துவுடன் குத்துப் பாட்டு-சோகத்தில் அமீர்
நீத்து சந்திராவுடன் சேர்ந்து ஆடியுள்ள குத்துப் பாட்டுக்காக பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளாராம் அமீர்.
மெளனம் பேசியதே முதல் பருத்தி வீரன் வரை இயக்குநராக கலக்கிக் கொண்டிருந்த அமீர் பின்னர் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போது ஒத்தப் பாட்டுக்கு, நீத்து சந்திராவுடன் இணைந்து செமத்தியான குத்தாட்டம் போட்டுள்ளார் யுத்தம் செய் படத்துக்காக.
ஆனால் அந்தப் பாட்டுக்கு ஆடியதற்காக தற்போது வருத்தத்தில் உள்ளாராம் அமீர்.
மிஷ்கின் இயக்கி, சேரன் நாயகனாக நடித்துள்ள படம்தான் யுத்தம் செய். இதில் ஒரு குத்துப் பாட்டை வைத்துள்ளார் மிஷ்கின். ஏற்கனவே இவர் சித்திரம் பேசுதடி படத்தில் வைத்த வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் குத்துப் பாட்டு இன்று வரை பட்டி தொட்டியெங்கும் பேவரைட் பாட்டாக உள்ளது. அதேபோல கத்தாழைக் கண்ணாலே பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.
அந்தவரிசையில் யுத்தம் செய் படத்தில் இவர் வைத்துள்ள அமீர்-நீத்து சந்திரா ஆடியுள்ள குத்துப் பாட்டும் பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளார் மிஷ்கின். ஆனால் அமீர்தான் சோகமாக உள்ளாராம்.
ஏன் இந்த சோகம்...?
மிஷ்கினும், சேரனும் எனது நண்பர்கள். அவர்கள் வற்புறுத்திக் கேட்டதால்தான் இப்பாடலுக்கு ஆடினேன். ஆனால் இதுபோன்ற பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு உண்மையில் இஷ்டமே இல்லை. எனவே இனிமேல் இதுபோல ஆட மாட்டேன்.
அது மட்டுமல்ல படம் வெளியாகும் போது இந்தப் பாடலைப் பார்க்கவும் மாட்டேன் என்கிறார் மிதிக்கக் கூடாததை மிதித்து விட்டது போல வெறுப்புடன்.