Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சக நடிகையுடன் காதல் தோல்வி: புது ஹீரோ தற்கொலை!
அம்புலி என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜய். இது 3டி படமாகும். ஓர் இரவு என்ற திகில் படத்தை எடுத்த இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர் -ஹரீஷ் நாராயணன் ஆகியோர் இயக்கியுள்ள படம் இது. படப்பிடிப்பு முடிந்து அம்புலி ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் அஜய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சாவுக்கு காரணம் தெரியவில்லை.
அம்புலி படத்தில் அஜய் ஜோடியாக நடித்தவர் புதுமுக நடிகை சனம். இவரும் பெங்களூரை சேர்ந்தவர்தான். சனம் மீது அஜய் காதல் வயப்பட்டதாகவும் ஆனால் சனம் காதலை ஏற்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது.
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜய் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.
இதுபற்றி அம்புலி படத்தின் இயக்குனர் ஹரி சங்கர் கூறுகையில், "அம்புலி படத்தை முடித்து விட்டு அஜய் பெங்களூர் சென்று விட்டார். டப்பிங் பேசும் போது அழைக்கிறோம் என்று அவரிடம் சொல்லி அனுப்பினோம். அஜய்க்கு தமிழில் பேச தெரியும். எனவே குரல் பொருத்தமாக இருந்தால் அவரையே பேச வைக்கலாம் என முடிவு செய்தோம்.
ஆனால் திடீரென்று தூக்கில் தொங்கி அஜய் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக பெங்களூர் சென்றோம். அஜய் வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தோம். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
அம்புலி படத்தில் கதாநாயகியாக நடித்த சனத்தை அஜய் காதலித்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது. அஜய் பெற்றோர் எங்களிடம் விசாரித்தனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா என்று கேட்டனர். 'எங்களுக்கு தெரிந்த வரை அப்படி எதுவும் இல்லை,' என்றோம்.
அஜய் இறந்ததால் அம்புலி படத்தில் அவருக்கு வேறு ஆள் வைத்து டப்பிங் பேச வைத்தோம்," என்றார்.
அம்புலி தவிர, உதிரம் என்ற படத்திலும் நடித்து வந்தார் அஜய். இதன் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. அஜய் மரணத்தால் படம் பாதியில் நிற்கிறது.