Don't Miss!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சமூக சேவகியாக மாறிய தர்ஷா குப்தா… குவியும் பாராட்டு!
சென்னை : விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா உணவின்றி வாடும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியாக சென்று உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த நெருக்கடியான நேரத்துல உள்ளாற இருக்கற அமைதிய வெளில கொண்டு வரணும்... சரத்குமார் ட்வீட்
அதே போல இவர் ராயபுரத்தில் வருமானமின்றி தவித்த மீனவ குடும்பத்திற்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.
அடக்க ஒடுக்கமாக
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த தொடரில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக அடுக்க ஒடுக்கமாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.
பிரபலமானார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2-வது சீசன் சீசனில், இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், இவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி கலக்கி வருகிறார்.
கிளாமர்
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், பட வாய்ப்புக்காக கவர்ச்சியை தூக்கலாக காட்ட ஆரம்பித்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் சீரியல்களில் நடித்து பிரபலமானதை விடவும் இன்ஸ்டாகிராமில் பலவித வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.
சமூகசேவகி
தற்போது தர்ஷா குப்தா ஒரு சமூகசேவகியாக மாறி உள்ளார். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இவர் உதவிகளை செய்து வருகிறார். சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொவரு பகுதிக்கும் தானாக சென்று உணவு இன்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல, இவர் ராயபுரத்தில் வருமானமின்றி தவித்த மீனவ குடும்பத்திற்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.