Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதறிப்போன ரசிகர்கள் !
மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோ உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் தீபிகாவிற்கு என்ன ஆச்சு என பதறிப் போய் விசாரித்து வருகின்றனர்.
லைகாவே ரிலீஸ் செய்யும் பொன்னியின் செல்வன்..முக்கிய நிறுவனம் இல்லாமல் வெளியாகும் 2 பெரிய படங்கள்
நடிகை தீபிகா படுகோனே
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜான் ஆபிரகாமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாக உள்ளது.
ஜவான்
பதான் தவிர, தீபிகா படுகோனே, ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் படத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்திலும் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், தீபிகா படுகோனேவுக்கு நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீபிகாவுக்கு பல பரிசோதனைகளை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர் அரை நாள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளார்.
ரசிகர்கள் நிம்மதி
தீபிகா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் அவரது உடல்நிலை சரி இல்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்கு பின் தீபிகா இப்போது நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவல் வந்த பிறகே அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
இது இரண்டாவது முறை
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த 'Project K' படப்பிடிப்பின் போது தீபிகா படுகோனாவுக்கு இதய துடிப்பு அதிகரித்ததை அடுத்து, அவர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீபிகாவுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தீபிகாவுக்கு வாயு தொடர்பான பிரச்சினை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் மீண்டும் 'Project K' படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பினார்.