Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோயின் வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம்.. பிரபல இயக்குனர் மீது இளம் நடிகை புகார்!
கொச்சி: வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பிரபல இயக்குனர் மீது இளம் ஹீரோயின் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
பிரபல மலையாள இயக்குனர் கமல். ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
முன்னணி ஹீரோக்களான, மம்மூட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம், பிருத்விராஜ் உட்ட பலரை இயக்கியுள்ளார்.
OTT விவகாரம்..எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய உரிமை இருக்கு.. தயாரிப்பாளர்கள் திடீர் அறிக்கை!
ஷாலினி
இந்தியில் அஜய் தேவ்கன் நடித்துள்ள படத்தையும் இயக்கியுள்ளார். தமிழில், பிரஷாந்த், ஷாலினி நடித்த 'பிரியாத வரம் வேண்டும்' படத்தை இயக்கியவர் இவர்தான். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆமி என்ற மலையாள படத்தை இயக்கினார். இதில் மஞ்சுவாரியர், முரளி கோபி உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து பிரனய மீனுகளுடே கடல் என்ற படத்தை இயக்கினார்.
பாலியல் துஷ்பிரயோகம்
இதில் வினாயகன், திலிஸ் போத்தன் நடித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு ஹீரோயின் வாய்ப்பு தருவதாகக் கூறி இயக்குனர் கமல், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் நடிகை ஒருவர், பரபரப்பு புகார் கூறியுள்ளார். கேரள சினிமாவில் இது பரபரப்பானது. அந்த இளம் நடிகை கூறியுள்ள புகாரில், ஆமி படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது, எனக்கு அடுத்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக, இயக்குனர் கமல் சொன்னார்.
ஏமாற்றிவிட்டார்
பிறகு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். ஆமி படப்பிடிப்பின் போதும் பாலியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தினார். அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை ஏமாற்றிவிட்டார். அவர், ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்' என்று காட்டமாக புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக வக்கீல் நோட்டீஸும் அவருக்கு அனுப்பியுள்ளார்.
பெயரை கெடுக்க
இந்தச் செய்தி வேகமாகப் பரவியது. இதையடுத்து இதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் கமல், 'இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது. என் பெயரை கெடுப்பதற்கான பிரசாரம் இது. கேரள மாநில கலாசேத்ரா அகாடமியின் சேர்மனாகவும் நான் இருக்கிறேன். அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர், இதன் பின்னால் இருக்கிறார் என சந்தேகிக்கிறேன்.
காத்திருங்கள்
எனக்கு வக்கீல் நோட்டீஸ் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வந்தது. 'இது பொய்யான புகார் என்பதால், அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பார்ப்போம், காத்திருங்கள்' என்றார் எனது வழக்கறிஞர். காத்திருந்தேன். அதற்கு பிறகு எதுவும் இல்லை என்பதால், அதை நான் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான். இப்போது எனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை' என்று தெரிவித்துள்ளார்.