twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்.. சிஐஐ மாநாட்டில் ஜெயம் ரவி புகழாரம்!

    |

    சென்னை: தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அவரை பாராட்டி நடிகர் ஜெயம் ரவி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    ஏப்ரல் 9ம் தேதியான இன்று தொடங்கிய இந்த மாநாடு ஏப்ரல் 10ம் தேதி வரை இரு நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில், ராஜமெளலி, மணிரத்னம், பி வாசு, ஜெயராம், ஜெயம்ரவி, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், கெளதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட சினிமா துறையை சார்ந்த 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    லாரன்சை வச்சு வெற்றிப்படத்தின் 2வது பாகத்தை இயக்கறாரு கார்த்திக் சுப்புராஜ்... விரைவில் அறிவிப்பு! லாரன்சை வச்சு வெற்றிப்படத்தின் 2வது பாகத்தை இயக்கறாரு கார்த்திக் சுப்புராஜ்... விரைவில் அறிவிப்பு!

    முதலமைச்சர் ஸ்டாலின்

    முதலமைச்சர் ஸ்டாலின்

    தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் ஏப்ரல் 9ம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து பேசினார். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.

    சினிமாவின் வளர்ச்சிக்காக

    சினிமாவின் வளர்ச்சிக்காக

    தென்னிந்திய சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உரித்தான பல கருத்தரங்குகள் இந்த மாநாட்டில் நடைபெற உள்ளது. ஓடிடியின் வளர்ச்சி, தியேட்டர்களை நோக்கி மக்களை அழைத்து வர செய்யும் முயற்சி, சினிமா மார்க்கெட்டை எப்படி விரிவுப்படுத்துவது என பல விஷயங்கள் இந்த மாநாட்டில் பேசப்பட உள்ளன. தக்‌ஷின் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டை சத்யஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் தியாகராஜன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

    பக்கத்து ஸ்டேட் பிரபலங்கள்

    பக்கத்து ஸ்டேட் பிரபலங்கள்

    தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தெலுங்கில் இருந்து இயக்குநர் ராஜமெளலி, மலையாளத்தில் இருந்து நடிகர் ஜெயராம், பகத் ஃபாசில் கன்னடத்தில் இருந்து நடிகர் சிவராஜ்குமார் என மொத்தம் 300க்கும் அதிகமான பிரபலங்கள் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

    ஜெயம் ரவி புகழாரம்

    ஜெயம் ரவி புகழாரம்

    இந்த மாநாட்டை தொடங்கி வைத்து நானும் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவன் தான் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியை பாராட்டி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    நம்பர் ஒன் முதல்வர்

    நம்பர் ஒன் முதல்வர்

    கொரோனா இரண்டாம் அலையில் பதவியேற்று இன்று இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக உள்ளார் மு.க. ஸ்டாலின் என நடிகர் ஜெயம் ரவி பாராட்டி பேசியுள்ளார். இயக்குநர் ராஜமெளலி, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன் வைக்க உள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை பெரும் அளவு உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

    English summary
    Ponniyin Selvan actor Jayam Ravi praises Tamil Nadu Chief Minister MK Stalin is the Number One CM of India in Dakshin meet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X