Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்.. சிஐஐ மாநாட்டில் ஜெயம் ரவி புகழாரம்!
சென்னை: தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அவரை பாராட்டி நடிகர் ஜெயம் ரவி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏப்ரல் 9ம் தேதியான இன்று தொடங்கிய இந்த மாநாடு ஏப்ரல் 10ம் தேதி வரை இரு நாட்கள் நடைபெற உள்ளது.
இதில், ராஜமெளலி, மணிரத்னம், பி வாசு, ஜெயராம், ஜெயம்ரவி, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், கெளதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட சினிமா துறையை சார்ந்த 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
லாரன்சை வச்சு வெற்றிப்படத்தின் 2வது பாகத்தை இயக்கறாரு கார்த்திக் சுப்புராஜ்... விரைவில் அறிவிப்பு!
முதலமைச்சர் ஸ்டாலின்
தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் ஏப்ரல் 9ம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து பேசினார். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.
சினிமாவின் வளர்ச்சிக்காக
தென்னிந்திய சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உரித்தான பல கருத்தரங்குகள் இந்த மாநாட்டில் நடைபெற உள்ளது. ஓடிடியின் வளர்ச்சி, தியேட்டர்களை நோக்கி மக்களை அழைத்து வர செய்யும் முயற்சி, சினிமா மார்க்கெட்டை எப்படி விரிவுப்படுத்துவது என பல விஷயங்கள் இந்த மாநாட்டில் பேசப்பட உள்ளன. தக்ஷின் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டை சத்யஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் தியாகராஜன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
பக்கத்து ஸ்டேட் பிரபலங்கள்
தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தெலுங்கில் இருந்து இயக்குநர் ராஜமெளலி, மலையாளத்தில் இருந்து நடிகர் ஜெயராம், பகத் ஃபாசில் கன்னடத்தில் இருந்து நடிகர் சிவராஜ்குமார் என மொத்தம் 300க்கும் அதிகமான பிரபலங்கள் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
ஜெயம் ரவி புகழாரம்
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து நானும் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவன் தான் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியை பாராட்டி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நம்பர் ஒன் முதல்வர்
கொரோனா இரண்டாம் அலையில் பதவியேற்று இன்று இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக உள்ளார் மு.க. ஸ்டாலின் என நடிகர் ஜெயம் ரவி பாராட்டி பேசியுள்ளார். இயக்குநர் ராஜமெளலி, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன் வைக்க உள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை பெரும் அளவு உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.