Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
படப்பிடிப்பில் பங்கேற்ற... பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. தனிமை சிகிச்சை.. ஷூட்டிங் தள்ளிவைப்பு!
ஐதராபாத்: பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவுக்காக பிறக்கப்பட்ட லாக்டவுனில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டாலும் இந்த வைரஸ் தொடர்ந்து மிரட்டி வருகிறது.
நடிகர் பிரபாஸ் பர்த் டே.. பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் ரசிகர் பலி.. 4 பேர் படுகாயம்!
பரவும் தொற்று
இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இதனால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. சினிமா நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் உள்பட பலருக்கும் இந்த தொற்று பரவி இருக்கிறது.
கண்டேன் ஹீரோயின்
இந்நிலையில் பிரபல நடிகை ராஷ்மி கவுதமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மி, இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
காமெடி ஜபர்தஷ்
இப்போது தெலுங்கில், டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஜபர்தஷ் என்ற காமெடி நிகழ்ச்சியின் ஷுட்டிங்கில் இவர் பங்கேற்று இருந்தார். அதில் அவருடன் பங்கேற்ற சுதீருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ராஷ்மி கவுதமும் பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
தள்ளி வைப்பு
இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் இவர் பங்கேற்க இருந்த டிவி நிக்ழ்ச்சிகளின் ஷூட்டிங் நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நடிகர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
குணமாகி மீண்டனர்
கொரோனாவால் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜுன், நிக்கி கல்ராணி, ஜெனிலியா, தமன்னா, இயக்குனர் ராஜமவுலி, மலைகா அரோரா, அர்ஜுன் கபூர், விஷால், பிருத்விராஜ் உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.