Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அன்னைக்கு காலையில 6 மணிக்கு.. ரம்பம் போட்ட அனிதா.. ஸ்டாப் பண்ண சம்யுக்தா.. ஸ்பேஸ் கொடுக்கலையாம்!
சென்னை: 3வது புரமோவில் அனிதாவை ட்ரோல் பண்ண சீன் எப்படா வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அது வந்த பிறகு ஏன் டா வந்தது என வெறுப்பு அடைந்து விட்டனர்.
ரோபோ சங்கர் பேசுவது போல அன்னைக்கு காலையில 6 மணிக்குன்னு ஆரம்பித்து ரம்பம் போட ஆரம்பித்து விட்டார்.
டாப்பிக் மாறி போகுதுன்னு பின்னாடி இருப்பவர்கள் கலாய்க்க ஆரம்பித்த பிறகு தான் சம்யுக்தா தைரியமா அவரை ஸ்டாப் பண்ண சொன்னார்.
லுங்கியை தூக்கிக் கொண்டு ஆடிய ஷிவானி, சம்யுக்தா, கேபி.. வாய் பிளந்து பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள்!
அனிதா இல்லை இனி நீ அழுதா
அனிதா சம்பத்தின் பெயரை இனி அழுதா என மாற்றி வைத்து விட்டனர் பிக் பாஸ் ரசிகர்கள். அந்த அளவுக்கு தனது ஹஸ்பண்ட் பற்றி பேசும் போது அப்படி அழுது புலம்பி ஹவுஸ்மேட்களையே கடுப்பாக்கி விட்டார். ஷ்ப்பா, முடியலையேன்னு சம்யுக்தா கன்னத்திலே கை வைத்து விட்டார்.
மாறிய டாப்பிக்
மனசுக்கு பிடிச்சவங்க பத்தி மறக்க முடியாத ஒரு விஷயத்தை சொல்ல சொன்னா வர்தா புயலில் புருஷன் ரீ சார்ஜ் பண்ணி விட்டதை எல்லாம் அனிதா சம்பத் சொல்ல ஆரம்பித்தவுடன் இதுக்கு, சம்யுக்தா ரெண்டு அப்பு அப்பியே அனிதாவை ஸ்டாப் பண்ணியிருக்கலாம், அவங்க செஞ்சதுல்ல தப்பே இல்லை என்கிற ரேஞ்சுக்கு போயிட்டாங்க..
கன்னுக்குட்டின்னு சொன்ன ரம்யா
ஆஜீத்தும் ரம்யாவும் தான் முதன் முதலாக அனிதா அன்னைக்கு காலையில ஆறு மணிக்கு என ரோபோ சங்கர் பேசுவது போல ஒவ்வொரு சோகக் கதையாக பேசிக் கொண்டு அவரே அழுததை பார்த்து, என்ன டாப்பிக் மாறி போறாங்க என கிண்டல் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு கட்டத்தில் அனிதாவை ஆஃப் பண்ண கன்னுக்குட்டி என்றும் ரம்யா கூப்பிட்டது எல்லாம் ஓவர் குசும்பு.
போதும் நிறுத்து
ரம்யா பாண்டியன், ஆஜீத்தை பார்த்து பாலாஜி முருகதாஸ், ஷிவானி, மொட்டை தாத்தா என எல்லாருமே அனிதாவின் கதையை கேட்டு டென்ஷன் ஆகி விட்டனர். எல்லோருடைய ரியாக்ஷனை பார்த்த சம்யுக்தா, ரொம்ப அமைதியா, அனிதா ரொம்ப லாங்க போகுது, நிப்பாட்டுங்க என சொல்லியும் கேட்காம அனிதா பேசியது எல்லாம் செம பர்ஃபார்மான்ஸ்.
ஸ்பேஸ் கொடுக்கல
அனிதா ஸ்பேஸ் கொடுக்கலன்னு சொன்னதை வச்சு கமல் சாரே வார இறுதியில் பங்கமாக கலாய்த்த பிறகும், இங்கேயும் தனக்கு பேச ஸ்பேஸ் கொடுக்கலன்னு 1 மணி நேரம் ஒப்பாரி வைத்த பிறகு அனிதா பேசியதை பார்த்த ரசிகர்கள், இன்னும் முடியலையான்னு ஆடிப் போயிட்டாங்க, ஸ்பேஸே கொடுத்தாலும் உங்களுக்கு ஸ்பேஸ் இல்லைன்னு தான் சொல்வீங்கன்னு கிண்டல் பண்ணி வருகின்றன்ர்.
அனிதாவுக்கு ஆதரவு
சம்யுக்தா, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், கேபி என எல்லாருமே அழுது புலம்பி தங்களது கதைகளை சொல்லும் போது ரொம்பவே கண்ணீர் விட்டு கேட்ட ஹவுஸ்மேட்ஸ், சோகத்தையும் ஒரு ஓவருக்கு மேல் சொன்னால், சளித்துக் கொள்வது எல்லாம் செம ஸ்க்ரிப்ட் என்றே தெரிவதாகவும், அனிதா உங்க சோகத்தை உங்களுக்கு உரியவர்களிடம் மட்டுமே சொல்லுங்க, ஊருக்கு சொல்லாதீங்க என்றும் சொல்லி அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.