Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தினமும் என்னை அடிக்கிறாரு ... சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா 2வது கணவர் மீது புகார்!
சென்னை : சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
2013ம் ஆண்டு நடிகை ராதா தொழிலதிபர் பைசூல் மற்றும் அதிமுக பிரமுகர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.
ப்பா.. டீப் ஓபன் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தாறுமாறாய் கிளாமர் காட்டும் இனியா.. திணறும் இணையம்!
தற்போது இரண்டாவது கணவர் மீது புகார் அளித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
படங்கள் இல்லை
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ராதா. இவருக்கு பட வாய்ப்புகள் அமையாததால், அடுத்தடுத்து அவரைப் படங்களில் பார்க்க முடியவில்லை. படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இவரது பெயர் அடிக்கடி ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
வசந்தராஜா 2வது திருமணம்
நடிகை ராதாவுக்கு ஏற்கனவே தயாரிப்பாளருடன் திருமணமாகி குழந்தை உள்ளது. தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமான கணவரை விவாகரத்து செய்து விட்டு நடிகை ராதா தனியாக வாழ்ந்து வந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
சாலிகிராமத்தில் வாழ்ந்தனர்
வசந்தராஜா எண்ணூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தை உள்ள நிலையில், நடிகை ராதாவை திருமணம் செய்து கொண்டு சாலிகிராமத்தில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
காவல்நிலையத்தில் புகார்
இந்நிலையில், வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் நடிகை ராதா அளித்துள்ளார் . அதில், நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும், ஹைதராபாத்தில் இருந்து வந்த என் தாயையும் அடிக்க முயற்சி செய்ததாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் எஸ்.ஐ வசந்தராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.